Friday, March 28, 2008

தீமையை நண்மை சமன் செய்யுமா?

தீமையை நண்மை சமன் செய்யுமா?

தீமை, தவறு, பாவம், கெடுதல் போன்றவற்றை செய்தவர்கள் அதற்கு சமமாக நல்ல காரியங்கள் அதாவது பிறருக்கு உதவி, தான தர்மங்கள், நேர்மையாக நடத்தல் போன்ற நல்ல காரியங்களை செய்வதன் மூலம் சமன் செய்து விடலாம் என்றும், தீமைக்கு சரியான நன்மை செய்துவிட்டால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்பதும் இன்று உலகில் பரவலாக எல்லோரும் சொல்லும் கருத்தாக உள்ளது. அது சரியா தவறா என்பதை சற்று ஆராய்வோம்

1. கூவம் தியரி

A. நிலை ஒன்று: -

ஒரு குவளையில் பாதி அளவு கூவம் தண்ணீரை (சாக்கடை நீர்) தண்ணீரை எடுத்துக்கொள்ளவும் இன்னொரு குவளையில் 100% சுத்தம் பண்ணப்பட்ட சுத்தமான மினரல் வாட்டரை எடுத்துக்கொள்ளவும். சுத்தமான தண்ணீரை கூவம் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக உற்றி நன்றாக கலக்கவும்.

இரண்டும் நன்றாக கலந்த பிறகு அந்த தண்ணீரை குடிக்க முடியும் என்றால் கெட்ட செயல்களை நல்ல செயல்கள் சரிசெய்ய முடியும்.

ஆனால் யாரும் மனதார குடிக்க முடியாது.

B. நிலை இரண்டு:

இப்பொழுது குவளையில் இருக்கும் எல்லா தண்ணீரையும் கீழே கொட்டி விடவும். அப்படியே அதே குவளையில் சுத்தமான மினரல் வாட்டரை ஊற்றவும்.

இப்பொழுது கூட பழைய துர்நாற்றம் அதில் கொஞ்சம் இருப்பதால் இந்த நீரை நம்மால் குடிக்க முடியாது.

அதுபோல்தான் தீமையை (பாவத்தை) நண்மை (புண்ணியம்) ஒரு நாளும் சரி செய்ய முடியாது. பாவம் தண்டனையினால் (பலி) மட்டுமே சரி செய்யப்படும்

நிலை மூன்று:

இப்பொழுது குவளையில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக கீழே கொட்டி விட்டு நன்றாக டெட்டால் போட்டு கழுவவும். பிறகு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றினால் ஒருவேளை குடிக்க முடியும்.

அது போலத்தான் மனித இருதயமும் :-

மனித இருதயம் மகா திருகுள்ளதகவும், கேடுள்ளதகவும், வஞ்சம், பொறாமை, இச்சை, பண ஆசை போன்ற தீமையால் நிறைந்துள்ளது. இதை ஒருவர் எப்படி நன்மை செய்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை சுத்திகரித்தாலும் அதை சுத்தமாக்க முடியாது. இறைவனால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இறைவன் மகா பரிசுத்தர்.

பாவம் அறியாத பரிசுத்தர் இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் என்னும் டெட்டால் மட்டுமே நமது பாவத்தை கழுவி சுத்திகரித்து இறைவனுக்கு ஏற்றவனாக மாற்ற முடியும். அவராலே அன்றி வேறு எதனாலும் இறைவனிடம் ஒப்புரவாக முடியாது.



No comments: