Tuesday, November 17, 2009

அனுபவமாக்கப்படாத அறிவு ஆபத்தானது!

ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ஆற்றை கடந்து அக்கறை செல்வதற்காக வந்த பலர் பரிசல்காரன் இல்லாத காரணத்தால் அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் ஒரு இயற்பியல் பட்டம் படித்த ஒரு அறிவாளியும் இருந்தார். அவர் அங்கு நிற்ற மற்றவர்களிடம் "இந்த ஆற்றின் நீர் என்ன வேக அளவில் ஒடிகிறது தெரியுமா? இந்த ஆற்றின் மீது பரிசல் மிதந்து செல்வதற்கான விதி தெரியுமா? பரிசலை செலுத்துவதக்காக ஒருவர் பயன்படுத்தும் ஆற்றலில் அளவை கணக்கிட முடியுமா? என்ன வேகத்தில் சென்றல் எவ்வளவு நேரத்தில் அக்கறையை சேரமுடியும் என்று தெரியுமா? என்று கேள்விகளை அடுக்கிகொண்டே இருந்தார். அந்த கேள்விகளை எல்லாம் கூடியிருந்த பாமரமக்கள் ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.
.
சிறுது நேரத்தில் பரிசல்ஒட்டி வரமாட்டன் என்று அறிவிப்பு வந்தது. உடனே
இந்த அனைத்தும் அறிந்த அறிவாளியை அழைத்து "உங்களுக்குத்தான் எல்லா விதியும் தெரிகிறதே இந்த பரிசலை ஒட்டி எங்களை அக்கறை சேர்த்துவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த அறிவாளியும் சற்று யோசித்துவிட்டு எல்லோரையும் பரிசலில் ஏற்றி ஆற்று நீரில் ஓட்ட ஆரம்பித்தார். எந்த அனுபவமும் இல்லாத அவர் பரிசலை சமநிலையில் ஓட்டமுடியாமல் தவித்ததொடு ஒரு சுழல் வந்தபோது அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்ள பரிசல் கவிழ்ந்து எல்லோரும் பலியாகிபோனார்கள்.

இந்த கதையை பலர் கேட்டிருக்கலாம் அதாவது "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதுபோல, என்னதான் பெரிய படிப்பு மற்றும் அறிவு இருந்தாலும் போதுமான முன் அனுபவம் இல்லாமல் ஒருவரால் மிக முக்கியமான காரியங்களில் ஈடுபட முடியாது என்பதை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான கதை.
.
அதுபோல்
.
ஒருவர் என்னதான் பல வேதங்களை படித்திருந்தாலும், அனேக உண்மைகளை ஐயமற அறிந்திருந்தாலும், அறிவால் ஆண்டவரின் கட்டளைகளை ஆயிரம் முறை ஆராய்ந்து பார்த்திருந்தாலும் அந்த வேதங்களை எழுதிக்கொடுத்த ஒப்பற்ற இறைவனின் பாதத்தில் அமர்ந்து ஆர்வமுடன் விசாரித்து தன புரிதல் சரியானதுதானா என்பதை விசாரித்து அதனை தன வாழ்க்கையில் அனுபவமாக்கவில்லை என்றால் அந்த படிப்பறிவால் எந்த பயனும் ஏற்ப்பாட்து!
வேதஅறிவால் கருத்துடன் பேசி காண்பவரை கவர்ந்துவிடலாம், அறியாதவர்களிடம் அற்ப்புதமாக பேசி அநேகரை குழப்பிவிடலாம், கூலி கொடுக்காமல் ஒரு கூட்டத்தையே சேர்த்துவிடலாம் ஆனால் அது இறுதியில் அனைத்தும் ஆபத்தையே விளைவிக்கும்!
.
இறைவன் இன்றும் என்றும் இருக்கிறவர். தன்னை தேடுபவருக்கு தவறாமல்
பதிலளிப்பவர்! பட்சபாதம் இல்லாமல் பாரிலுள்ள எல்லோரையும் ஏக சமமாக
பார்க்கிறவர்! படைத்துவிட்டு பாராமுகமாய் இருப்பவரல்ல! இன்னலில்
விட்டுவிட்டு இளைப்பாற போகிறவர் அல்ல!

அந்த அன்பான இறைவனிடம் அமர்ந்து கேளுங்கள்! உண்மை என்னவென்பதை உங்களுக்கு ஒரு நொடியில் விளங்க வைப்பார். மற்றபடி அறிவை பயன்படுத்தி ஆண்டவரை அறியவிரும்பினாலோ, ஆலயம்தவராமல் போய் வருவதாலோ, அடுத்தவர் சொல்லை கேட்டு ஆறு குளமென்று அலைவதாலோ உண்மையை ஒருபோதும் அறியவே முடியாது என்றே நான் கருதுகிறேன்!

Friday, September 25, 2009

தூக்கணாங் குருவிகளும் குரங்கும்!

ஒரு பனை மரத்தில் அனேக தூக்கனான் குருவிகள் கூடுகட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தன. (தூக்கனான் குருவி பற்றியும் அதன் கூடு பற்றியும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வீடுகளில் உள்ள சிட்டு குருவிபோல மிக சிறிய குருவி, பனைமர ஓலைகளில் சிறு சிறு வைக்கோல் பஞ்சுபோல் தொங்கும் அவை கட்டும் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்)
.
ஒரு நாள் பெரிய மழை கொட்டியது! எல்லா குருவிகளும் தங்கள் தங்கள் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. அப்பொழுது ஒரு குரங்கு மழையில் நனைத்துக்கொண்டு ஒதுங்க இடமில்லால் ஓடி வந்து அந்த பனை மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கியது.
.
பனைமர கூரையில் சரியாக ஒதுங்க முடியாமல் குரங்கு மழையில் நனைவதை பார்த்த குருவிகள் அந்த குரங்கை பார்த்து "குரங்கே நீ இவ்வளவு பெரிய உருவமாய் இருக்கிறாயே, ஏன் உனக்கு ஒரு கூடுகட்டி அதில் வசிக்க கூடாது? எங்களை பார் இவ்வளவு சிறிய உருவமாக் இருந்தும் மழை வெயிலுக்கு ஒதுங்க ஒரு அருமையான வீட்டை கட்டியிருக்கிறோம். நீயும் அதுபோல் செய்து பாதுகாப்பாக வாழலாம் அல்லவா" என்று மிகுந்த பரிதாபத்தோடு அதற்க்கு ஒரு அறிவுரை கூறியது.
.
குரங்கு அதற்க்கு பதில் ஏதும் சொல்லவில்லை
.
சிறிது நேரத்தில் மழை நின்றது. உடனே அந்த குரங்கு அவசர அவசரமாக பனை மரத்தில் தாவி ஏறியது அதை கண்டு பயந்து பறந்த குருவிகள் பார்த்து "ஊசி மூஞ்சு மூடா, எனக்கு கூடு கட்டதெரியாது, கூட்டை பிரித்து எரியதான் தெரியும்" என்று கடும் கோபத்தோடு கூறியதோடு எல்லாகுருவிக்கூட்டையும் பிய்த்து தூர எரிந்தது!
அந்தோ! அறிவுரை கூறிய குருவிகள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு பறந்தன!
.
ஆம்!
"முத்துபோன்ற நல்ல அறிவுறையானாலும் அது மூடர்களுக்கு சொல்லப்பட்டால் அதனால் எந்த நன்மையும் ஏற்ப்படாததொடு அதை சொல்பவருக்கே தீங்கை வருவிக்கலாம்" என்ற அருமையான நீதியை சொல்லும் ஒரு சிறுகதை இது
.
சில வருட்கங்களுக்கு முன் நான் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தேன். அவர் மிகுந்த கோபக்காரர். வேலையாட்களை குறை கண்டுபிடிப்பதும் மிக கடுமையாக திட்டுவதும் அவரது வாடிக்கையான செயல்கள். நான் உண்மை நேர்மை என்று மிக சரியாக நடப்பதால் என்னை அவர் திட்டுவது இல்லை. எனவே சக வேலையாட்கள் என்னிடம் அடிக்கடி அவரை குறைசொல்லி புலம்புவதுண்டு.. நாளாக ஆக ஆக அவரின் அர்ச்சனை தாங்க முடியாமல் ஒவ்வொருவராக வேலையை விட்டு போய்விட்டனர். நானும் வேறு இடத்துக்கு சென்றாலும் பகுதிநேர வேலையாக அவரிடம் போவதுண்டு.
.
ஒருநாள் அவர் என்னிடம் வேலைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது யாராவது நல்ல ஆள் இருந்தால் சொல்லுங்கள் என்று பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நான் "சார் நீங்கள் வேலைக்கு வருபவர்களை சற்று இலகுவாக கையாள வேண்டும்" என்றேன். உடனே அவர் சொல்லுங்க நேசன் என்னிடம் என்னென்ன குறை உள்ளது என்று ஆவலோடு கேட்க, நானும் அவரிடம் உள்ள உண்மை குறைகளை சொல்லி இதெயெல்லாம் நீங்கள் மாற்றவேண்டும் என்று எடுத்துரைத்தேன். நான் சொல்வதஎல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு அவர் சொன்ன பதில்
.
"மற்றவர்களைபோல உங்களை நடத்தாமல் கொஞ்சம் அன்போடு பேசினால் என்னிடமே குற்றம் கண்டுபிடிக்கிறீர்களா? நாளையில் இருந்து எனது காம்பவுண்டு சுவருக்குள் உங்கள் கால்படக்கூடாது, வெளியே போங்கள்" என்று கோபமாக திட்டிவிட்டார்.
.
"பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்". என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நினைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு கடந்துபோனேன்.

Wednesday, August 19, 2009

இருளில் ஏற்றிய விளக்காய் இருங்கள்!

இன்றைய உலகில் உள்ள பல நல்ல மனிதர்கள் கூட, பிறருக்கு கேடு தீங்கு செய்யும் பிற மனிதர்களை கருத்தில் கொண்டு, உலகமே கெட்டு கிடக்கிறது இதில் நான் மட்டும் இப்படி நேர்மையாக வாழ முடியாது, அப்படி நேர்மையாக வாழ்ந்துதான் என்னபயன்.என்று அக்கலாய்க்கும் வார்த்தைகளை அடிக்கடி கேட்க முடியும்.
.

இது சரியான ஒரு வார்த்தையா?
.

மிகப்பெரியா காரிருளில் ஒரே ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்தால் அதன் வெளிச்சம் நிச்சயம் பலருக்கு பயனுள்ளதாக அமையும் உலகில் உள்ள அத்தனை இருளும் ஒன்றாய் சேர்ந்தாலும் அந்த விளக்கின் வெளிச்சத்தை ஒன்றுமே செய்யமுடியாது மேலும் இருட்டில் தடுமாறும் பலருக்கு சரியான வழியை கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்.
அதுபோல்
.

இந்த அநியாயம் அக்கிரமம் சுயநலம் நிறைத்த உலகில் ஒரே ஒருவர் இறைவனுக்கேற்ற பரிசுத்தமாக வாழ்ந்தாலும் அவரை எத்தனை அநியாயகாரர்கள் ஓன்று சேர்ந்தாலும் ஒன்றுமே பண்ணிவிட முடியாது! அவருடைய நற்பண்புகள் ஒரு விளக்கை போல வெளிச்சத்தை தருவதோடு இறைவனை தேடும் ஆவலுள்ள பலருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
.

நீதி நேர்மையான உத்தமம் நிறைந்த வாழ்க்கை ஒருபோதும் பயனற்றதாக போகாது! எனவே நீதி நேர்மையைவிட்டு விலகாத ஒரு பரிசுத்த வாழ்க்கையை எப்பொழுதும் வாஞ்சித்து பின்பற்றுவோமாக!

Wednesday, July 15, 2009

வழி நடத்தும் இறை வல்லமை!

இரண்டு காலும் செயலிழந்த ஒருமுடவனிடம், "ஓட்டப்பந்தயத்தில் எவ்வாறு ஓடி வெல்வது" என்றொரு தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்தலாம்! அவரும் அனைத்தையும் ஆர்வமாக கேட்டு எல்லாவற்றயும் அறிந்துகொள்ள முடியும்! ஆனால் தான் அறிந்ததை தனது செயலில் காட்டுவதற்கு அவரிடம் கால்கள் இருப்பதில்லை!

.

இரண்டு கண்ணும் இல்லாத ஒரு குருடனிடம், 'ஒரு வீடயோ கேமராவை எவ்வாறு இயக்குவது' என்பதைப்பற்றி விளக்கி சொல்ல அவரும் அதை ஆர்வமாக கேட்டு அதை பற்றி முழுமையாக அறிந்து கொண்டாலும் அதை செயல்படுத்தி பார்த்து அறிந்துகொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை!

உலகிலுள்ள மதங்களும் அதுபோல்தான் உள்ளன!

இதை செய்யாதே பாவம் அதை செய்யாதே பாவம் என்று அனேக காரியங்களை பாவமாக எச்சரிக்கும் மதங்கள், அவற்றை செய்யாமல் விலக்க தேவையான எந்த ஒரு பலத்தையும் நமக்கு தருவதில்லை. பொதுவாக பாவம் என்பது நம்மை ஈர்க்கும் ஒரு மாபெரும் சக்தியாகவே இருக்கிறது. ஆன்மிகம் மற்றும் இறைவன் சம்பந்தப்பட்ட எத்தனையோ நல்ல விஷயங்களை அறிந்துகொள்ள விரும்பாத நாம், வாழ்க்கைக்கு சற்றும் தேவையற்ற பல பொழுதுபோக்கு அம்சம்களால் மிக அதிகமாக கவரப்படுகிறோம். (நமக்கு கிடைத்த பொழுது என்பது விலை மதிப்பில்லாதது, அது போக்குவதற்காக கொடுக்கப்படவில்லை என்பது அநேகருக்கு தெரிவதில்லை!)

மேலும் மது, சிகரெட் போன்ற பாவ பழக்கவழக்கங்கள், புறம் கூறுதல், பொய் பேசுதல் போன்ற சிறு சிறு பாவங்கள் நாம் நினைத்தாலும் உடனே கைவிட முடியாத அளவுக்கு நம்மை கட்டி வைத்துள்ளது என்பது அநேகர் அறிந்ததே!இப்படி பல பாவங்களை விட்டு மீள முடியாத ஒரு நிலையில் ஒருவர் தவிக்கும்போது அவரிடம் "அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது" என்ற கட்டளைகளை மட்டும் கொடுப்பதால் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை!

இப்படி தான்னால் முடியாது என்றொரு நிர்கதியற்ற நிலையில் ஒருவர் இறைவனிடம் வந்து நிற்கும்போது, அவருக்கு செய்யும் பாவத்தை உணர்த்தி அதை ஜெயிக்க பலம் கொடுத்து, கரம் பிடித்து வழி நடத்தி செல்லும் இறைவல்லமை ஓன்று உண்டு! "அநேகர் தடம் மாறிப்போகும் இவ்வுலகில் நான் பரிசுத்தமாக இறைவனுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும், ஆனால் என் பலத்தால் முடியவில்லையே ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்" என்று பரிதபிப்போடு மன்றாடும் யாரானாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவரானாலும் அவருக்கு உண்மையை உணர்த்தி உதவி செய்யும் அந்த ஆவியான தேவன் உங்களுக்குள் வந்து தங்கி நீங்கள் தவறு செய்யும்போது பரிவோடு கண்டித்து, வழி விலகும்போது அன்போடு உணர்த்தி. இறைவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உங்களை மாற்றுவார். அதை நம்மால் அவ்வப்பொழுது உணர முடியும்!

.

உலக மனிதர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு பள்ளி தொலை தூரத்தில் உள்ளது என்றால் அவர்கள்நேரத்துக்கு போக ஒரு சைக்கிளாவது வங்கி கொடுக்கிறோம். அதுபோல் அவர்களுக்கு தேவையான நன்மைகளை கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்திருக்கும் போது, நம்மேல் அன்புமிக்க நம் இறைவன் உனதமான இறை ராஜ்யத்தை அடைவதற்கு வெறும் கட்டளைகளை மட்டும் கொடுத்துவிட்டு "அதன் படி நட" என்று கண்டிக்கும் ஒரு வாத்தியார் அல்ல!

.

அவருடைய விருப்பப்படி நடக்க வாஞ்சையோடு வரும் ஒருவர் அதற்க்கு தேவையான பலத்தை கேட்கும்போது, இறைவன் அந்த பரிசுத்த வல்லமையை தராமல் மறுப்பவர் அல்ல! ஆனால் "இந்த உலகில் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் எனவே என்னால் இப்படி பரிசுத்தமாகவெல்லாம் வாழ முடியாது" என்று துணிந்து தவறு செய்பவர்கள் இந்த இறை வல்லமையை ஒருபோதும் அறிய முடியாது!

இந்த வல்லமையின் துணையின்றி ஒருவர் இறைவனுக்கு பிரியமாக வாழ்வது மிகமிக கடினம் என்பது நான் அறிந்த உண்மை!

Tuesday, June 23, 2009

இறைவனை அடைய இயேசு ஒருவர்தான் வழியா?

"நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையன்றி ஒருவரும் பிதாவிடதுக்கு வரான்" என்று இயேசு சொன்ன வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்த்தவர்கள் "இயேசு ஒருவரே வழி" என்று போதிக்கும் போது,
.
"இயேசு ஒரேவர் மட்டும்தான் வழியா?"
.
இயேசுவின் உதவி இல்லாமல் வேறு யாரும் இறைவனைஅடைய முடியாதா என்ற இந்த கேள்வி அனேகமாக எல்லா பிறமத சகோதரர்கள்மத்தியிலும் எழுவது இயற்க்கை!
.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இறை மார்க்கத்தை போதித்து வரும் இந்துமதத்தின்மூலம் இறைவனை அடைய வழி இல்லையா?
இறைமார்க்கத்தில் சரியாக நடந்து முக்தியடைந்த வள்ளலார், ரமண மகரிஷி, ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் இறைவனை அடையவில்லையா?
இயேசு ஒருவர்தான் வழி என்றால் இவர்களால் எப்படி இறைவனை அடைய முடிந்ததுபோன்ற பல்வேறு கேள்விகள் எழ வாய்ப்புள்ளது!
.
இதற்க்கான பதிலை சற்று ஆராய்வது நலம் என்று கருதுகிறேன்.
.
இந்து மார்க்கத்தின் முக்கிய கொள்கை "கர்மா" ஆகும். ஒருவர் செய்த கர்மா என்னும் பாவபுண்ணியம் அவரை பல பிறப்புகளில் தொடர்ந்து வரும் என்றும் அந்த கர்மாவின் நிலை முற்று பெரும்போதே ஒருவன் இறைவனை அடைய வாய்ப்பு உருவாகிறது என்றும் விளக்குகிறது!
.
வள்ளலார் அவர்களின் வெளிப்பாடுபடி, பாவம் செய்தவர்கள் சுழற்ச்சி முறையில் பூமியில் மறுபிறவி எடுக்கின்றனர் என்றும், என்று ஒருவர் முற்றிலுமாக "மாயா" நிலைகளில் அதாவது உலக பற்றிலிருந்து தன்னை விடுவித்து கொள்கிறாரோ அன்று அவர் உன்னத நிலயை அடைகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.
.
இந்து தத்துவங்கள் அனைத்து உண்மைகளே! ஆனால் இன்றைய பாவம நிறைந்த உலகில் ஒருவரால் முற்றிலுமாக உலக மாயா நிலைகளிலிருந்து விடுபட்டு பாவமே இல்லாமல் வாழ முடியுமா? என்பதுதான் இங்கு கேள்வி! நீங்கள் அதுபோல்பாவமே செய்யாத பரிசுத்தராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இறைவனடி சேரவழி உள்ளது இதை நான் மறுப்பதற்கில்லை!
.
இயேசு பூமிக்கு வந்து பாவத்துக்காக மரித்ததும் பரிசுத்தமாக வாழும்பரிசுத்தருக்காக அல்ல! பாவத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பாவிகளுக்காகத்தான் என்பதை அவரே "நீதிமான்களை அல்ல பாவிகளை இரட்சிக்கவேவந்தேன்" என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.
.
நீங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு நன்றாக யோசித்து "நான் ஒரு பாவமும் செய்யாத நீதிமான்! எனக்கு எந்த பாவத்துக்கும் மன்னிப்பு தேவையில்லை" என்று சொல்லமுடியுமானால் உங்களுக்கு இயேசு தரும் பாவமன்னிப்பு தேவையில்லை
ஆனால் அப்படி வாழமுடியாதவர்கள் தங்களில் ஜன்ம பாவ/கர்மங்களிலிருந்து விடுதலை அடைந்தால்தான் மட்டுமே இறைவனடி சேரமுடியும். அப்படி பாவத்தில் இருந்து மீள முடியாமல் உழன்று கொண்டிருக்கும் மனித ஜென்மத்துக்கு, அவர்களும் இறைவனை அடைய ஒரு சலுகை வழியினைதான் இயேசு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளார்!
.
ஒரு சிறிய உதாரணம்.
.
அரசு வேலைக்கு வயதுவரம்பு 35ஆக இருக்கும் போது ஊனமுற்றோருக்கு அதுசலுகை அடிப்படையில் 40-45ஆக உயர்த்தப்படுகிறது அனால் அவர் எனக்கு சலுகை எதுவும் தேவையில்லை நான் பொது பிரிவின் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன் என்றால் யாரும் அவரை மறுப்பதில்லை அனால் தகுதி இழந்துவிடுவார்!
.
அதுபோல் பாவத்தால் ஊனமுற்றோர் ஒருவர், "நான் பாவி" என்று ஒத்துக்கொண்டு இயேசுவின் அண்டை வரும் போது, அவர் பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர் இறைவனைத் சேரவும் இயேசு தன்னிடம் உள்ள அதிகாரத்தால் அவருக்கு அனுமதி அளிக்கிறார் அந்த அதிகாரத்தை அவர் தன்னுடைய உயிரையும் இரத்தத்தையும் செலுத்தி பெற்றிருக்கிறார்!
.
மேலும் இயேசு அளிக்கும் மன்னிப்பு மூலம் ஒருவர் இறைவனை சென்று அடைவதில்லை! மாறாக மரித்தபின் "பரலோகம்" என்னும் ஓர் தனிப்பட்ட இடத்துக்கு அழைத்துசெல்லப்பட்டு நித்யமாக அங்கு வாழ்கின்றனர். எனவேதான் இயேசு "என்பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அவைகளில் ஒற்றை உங்களுக்கு ஆயத்தப்படுத்த போகிறேன்" என்று சொன்னார்.
.
இயேசு சொன்ன பரலோகம் என்பது வேறு, இறைவனின் திருவடிகளை அடைவது என்பதுவேறு!
.
எனவே தெரிவு உங்களுடையது (THE CHOICE IS YOUR'S)
.
நான் எந்த பாவமும் செய்யவில்லை எனக்கு எந்த சலுகையும் வேண்டாம் பொதுவழியில் (GENERAL CATAGORY) இறைவனிடம் நியாயதீர்ப்புக்கு வருகிறேன் என்று நீங்கள் கருதினால் தாராளமாக செய்யலாம்! அனால் இந்து புராணப்படி ஒரே ஒரு பொய் சொன்ன தருமன், தான் மரித்த பிறகு அந்த ஒரே பொய்க்காக சிறிதுநேரம் நரகத்தை போய் பார்க்க வேண்டி வந்தது என்பதை மறக்க வேண்டாம்! (நாம் எத்தனை பொய்கள் சொல்லியிருப்போம், என்னென்ன வஞ்ச எண்ணங்கள், பொறாமைகள்,ஏமாற்று வேலை திருட்டுகள் விபச்சார பாவங்கள், நம்மில் நிறைந்துள்ளதுஅப்படியிருக்க நாம் நரகத்தில் நித்யமாக தங்கவேண்டிய நிலைதான் ஏற்ப்படும்என்றே நான் கருதுகிறேன்)
.
இல்லை "என்னால் முடியவில்லை நான் பாவி, இயேசுவின் சலுகை வழியில் பாவமன்னிப்பை பெற்று பரலோகம் போக விரும்புகிறேன்" என்று நினைத்தால் "வருத்தப்படு பாரம் (பாவம்) சுமக்கிரவர்களே வாருங்கம் என்னிடத்தில் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று விரித்த கையை மூடாமல் ஏக்கத்தோடு அழைத்து "என்னிடத்தில் வரும் எவரையும் நான் புறம்பேதள்ளுவதில்லை" என்று இனிய வாக்கு வழங்கியுள்ள இறைமைந்தர் இயேசுவிடம் ஓடிவாருங்கள் அவர் உங்களுக்கு நிச்சயம் இளைப்பாறுதல் தருவார்!

Friday, February 27, 2009

உன்னத நோக்கம் ஓன்று உண்டு!

இந்த உலகில் ஆண்டவரால் படைக்கப்பட்ட எந்தொரு உயிரியானாலும் பொருளானாலும் தேவையில்லாமல் அர்த்தமற்றதாக படைக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். அதனால் யாருக்காவது ஒரு பயன்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அந்த பயன்பாட்டை நாம் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம்.

ஒன்றுக்கு மேற்ற்ப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை கொண்ட அனேக பொருட்களும் இந்த உலகில் உண்டு! உதாரணமாக நீர் காற்று மரங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் அதனால் அனேக பயன்பாடுகள் உண்டு. இப்படி ஒரு பொருளால் பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் அவற்றால் மிக முக்கியமான் பயன்பாடு என்று ஓன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக நீரை எடுத்துக்கொண்டால் அதன் முக்கிய பயன்பாடு என்று உயிர்வாழ தேவையான குடிநீரை எடுத்துக்கொள்ளலாம்.

அதுபோல் இந்த உலகில் மனிதனால் படைக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் உள்ளன அவை ஒன்வ்வொன்றும் ஏதாவது ஒரு பயன்பாட்டுக்காக படைக்கப்படுகின்றன. தேவையற்ற பயன்பாடற்ற பொருட்களை மனிதன் பொதுவாக உருவாக்கப்படுவது இல்லை.

இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலும் பல பொருட்கள் பல் நோக்கு அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன உதாரணமாக தற்காலத்து செல்போல், கணினி போன்றவை. பல்நோக்கு பயன்பாட்டோடு ஒரு பொருள் உருவாக்கப்பட்டாலும் அதன் முக்கிய பயன்பாடு என்று ஓன்று எல்லா பொருளுக்கும் நிச்சயம் இருக்கும். உதாரணமாக ஒரு செல்போனினால் பம்,கேமரா,வீடயோ, நெட் வசதி போன்ற பல பயன்பாடு இருந்தாலும் அதன் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் தொலை தொடர்பு. மற்ற எல்லா சேவைகளையும் திறம்பட செய்யும் அதற்கேற்று உருவாக்கப்பட்ட தனி தனி கருவிகள் உள்ளன!

சரி இப்பொழுது நம் கருத்துக்கு வருவோம்.

இப்படி உலகில் உள்ள ஒவ்வொன்றும் எதாவது உன்னத நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், எல்லாவற்றிக்கும் மேலான ஞானத்தோடும் அறிவோடும் படைக்கப்பட்டுள்ள, உலகில் வாழும் மனிதர்களிடம் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று கேட்டால் "ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை" என்பதில் ஆரம்பித்து "எல்லா இன்பத்தையும் அனுபவிக்கவே பிறந்தேன்" என்பது வரை பல பதில்களை பெறமுடியும்.


சிலர் பொது சேவை செய்து அடுத்தவருக்கு உதவவே ஆண்டவர் என்னை படைத்தார் என்று சொல்லி திருப்தி அடைகின்றனர் சிலர் சினிமாவில் நடித்து எல்லோருக்கும் கலை சேவை செய்யவே என்னை இறைவன் படைத்தார் என்று பேட்டி கொடுக்கின்றனர் சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் தண்ணியில் மூழ்கி தள்ளாடி காலம் கழித்து அதனால் திருப்தியடைகின்றனர் இப்படி ஒவ்வௌருவரும் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் களித்துவந்தாலும், இந்த உலகில் ஒரு மனிதரை கூட ஆண்டவர் விளையாட்டுக்க்காகவோ அல்லது வேலைஇல்லாமலோ படைக்கப்படவில்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டவர் ஒருவரை படைததர்க்கான ஒரு உன்னத நோக்கம் நிச்சயம் உண்டு! அந்த நோக்கத்தை ஆண்டவரிடம் அமர்ந்து மன்றாடி கேட்டு அறிந்து அதன்படி செயல்படாதவரை, நம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாளும் முற்றுபெராமல் எந்த அருத்தமும் இல்லாத ஒரு முழுமையற்ற வாழ்க்கையாகவே அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை!
சிந்திப்போம் செயல்படுவோம்!