Monday, April 28, 2008

சொர்க்கம் நரகம் உள்ளதா?

அன்பானவர்களே!
.
இன்றைய நாட்களில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். கடவுள் உண்டா இல்லையா என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியாதது போல, நரகம் சொர்க்கத்தை பார்த்தவர்கள் கூட இதுதான் நரகம் என்று அடுத்தவருக்கு காட்ட முடியாத ஒரு இடமே நரகம், பாதளம் போன்றவை. எனவே இதை பற்றி சற்று ஆராய்வது நல்லது என்று நினைக்கிறேன்.
.
இன்று ஒருவரிடம் சொர்க்கம் நரகம் உள்ளதா என்று கேட்டால் கீழ்க்கண்ட பதில்களில் ஒன்றை தான் கூற முடியும்
  1. சொர்க்கம் நரகம் இல்லை.
  2. சொர்க்கம் இருக்கா இல்லையா என்று தெரியாது.
  3. சொர்க்கம் நரகம் உண்டு

1.சொர்க்கம் நரகம் இல்லை;

இன்று உலகில் அநகர் சொர்க்கம் நரகம் என்று ஒன்று கிடையாது என்றும், இந்த உலகம் தான் எல்லாமே என்றும் வாதிடுகின்றனர்.
.

நம் கண்ணுக்கு தெரியவில்லை என்ற காரணத்தினால் எந்த ஒன்றையும் இல்லை என்று சொல்வது சரியான பதில் அல்ல. நம்முடைய உயிரை கூட நமது கண்ணால் பார்க்க முடியாது அனால் உயிர் இல்லை என்றால் மனிதன் ஒரு பிணமே! சுமார் 1000 வருடத்துக்கு முன்பு மின்சாரம் ஒன்று இருக்கிறதா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வார்கள் ஆனால் இன்று நாம் அதன் மேம்பட்ட பயனை அனுபவித்து வருகிறோம். அது போல் எத்தனையோ வருடங்களாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று நினைத்தார்கள் ஆனால் உண்மை வேறாக இருந்துள்ளது.

.

இன்று இல்லை என்று இருப்பது நாளை உண்மை என்று நிரூபிக்கப்படாலம், ஒரு பொருளை அல்லது இடத்தை உண்டு இல்லை என்று தீர்மானிக்க நமது கண் ஒரு அளவுகோல் அல்ல. எனவே சொர்க்கம் நரகம் இல்லை என்று சொல்வது தவறான வாதம் "அது இருக்கிறதா இல்லையா தெரியாது என்பதே சரியான பதில்.

.

2. சொர்க்கம் நரகம் இருக்கிறதா என்று தெரியாது.

எதாவது ஒரு முக்கியமான காரியம் நமக்கு தெரியவில்லை என்றால் நாம் அதை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறோம் அல்லது அது சம்பந்தமான புத்தகங்கள், செய்திகள் இவற்றை கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
.
பணம் சம்பாதிப்பதில் இருந்து பக்கத்து தெருவுக்கு போவது வரை எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் நாம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்த்தவம், இஸ்லாம் என்று எல்லா மதங்களும் நரகம் என்று ஒரு இடம் இருக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லும் அந்த இடத்தை பற்றி ஏன் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புவதில்லை என்பது பெரிய புதிராக உள்ளது. தெரிந்து கொண்டால் நாம் நினைத்தபடி வாழ முடியாது என்ற பயமா அல்லது பொய் சொல்லக்கூடாது என்று திட்டவட்டமாக கட்டளையிடும் மதங்களே இப்படி சொர்க்கம் நரகம் உண்டு என்று பொய் சொல்கிறது என்று நினைக்கிறீர்களா?
.
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அதுபோல் அப்படி ஒரு இடம் இல்லாமல் அதை பற்றி எல்லா மதமும் குறிப்பிட வாய்ப்பு இல்லை. சொர்க்கம் நரகத்தை பார்த்தவர்கள் எழுதிய அனேக புத்தகங்கள் உலகில் உண்டு "நரகத்தை பற்றிய ஒரு தெய்வீக வேழிப்படு" "நான் கண்ட நரகமும் பாதாளமும்" " பரலோக வாசலும் நரக அக்கினியும்" இது போல் புத்தகம் எழுதியவர்களை தவிர இன்னும் எத்தனையோபேர் பேர் அந்த இடங்களை பார்த்துள்ளனர் நரகத்தின் மிக மிக கொடிய தன்மையை விளக்கியுள்ளனர் ஏன் நான் கூட நரகம் பாதளம் இவற்றை நேரடியாக பார்ப்பதுபோல் பார்த்து கதறி துடித்துள்ளேன். .
.
"தெரியவில்லை" என்ற பதில் யாருக்கும் மன்னிப்பை கொடுக்காது. சட்டத்தை பற்றி தெரியாது என்று சொல்லி தப்பு செய்பவருக்கு தண்டனை கிடைக்காமல் போவது இல்லை. இந்த அற்ப கால வாழ்க்கை உள்ள உலகில் சுகமாக வாழ்வதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கிரீர்களோ அதோடு ஒருபடி அதிக முயற்சி எடுத்து நித்யமாக இருக்க்போகும் இடத்தை பற்றி ஆராய்ந்தால் அதன் உண்மை தன்மையை அறிய முடியும்.
.
3. சொர்க்கம் நரகம் உண்டு:
சொர்க்கம் நரகம் உண்டு என்று நம்பும் நண்பர்களே நீங்கள் நரகம் என்ற அந்த கொடிய இடத்துக்கு போக மாட்டீர்கள் என்ற நிச்சயம் உங்களிடம் உண்டா?

ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை பொய் பார்த்தான் என்று இந்து மதம் சொல்கிறது "பொய்யன் இரண்டாம் மரணமாகிய அக்கினி கந்தகம் எரியும் இடத்தில் பங்கடைவான் என்று கிறிஸ்த்தவ மதம் சொல்கிறது, "இறுதி நாளில் பொய்யர்கள் நஷ்டம் அடைவார்கள் என்று திருக்குரான் சொல்கிறது.
.

பொய் சொல்வது மட்டுமே உங்களை நரகத்துக்கு பாத்திரவானாக மாற்றும் என்றால் நமது வாழ்க்கையில் இந்நாள் வரை இன்னும் எத்தெத்தனை கெட்ட செயல்கள் செய்துள்ளோம் எனவே நாம் எப்படி தப்பிப்போம்.

நான் நரகம் போகும் அளவுக்கு பெரிய பாவி அல்ல சின்ன சின்ன பாவங்கள் தான் உண்டு என்று சொல்கிறீர்களா?
.

ஒரு கால் டம்ப்ளர் சாக்கடை தண்ணியுடன் எவ்வளவு தான் நல்ல சுத்தமான தண்ணீரை கலந்தாலும் நம்மால் அதை குடிக்க முடியாது அது போல நம்மிடம் உள்ள ஒரு சின்ன பாவம் கூட நம்மை இறைவன் ஏற்றுக்கொள்ள தகுதி அற்றவனாக மாற்றிவிடும்.

.

எனவே நம்மிடம் நிறைந்துள்ள எல்லா அசுத்தமான செயல்கள், எண்ணங்களையும் முழுவதும் கீழே கொட்டிவிட்டு இயேசுவின் இரத்தம் என்னும் டெட்டால் போட்டு கழுவினால் மட்டுமே நமது பாவம் மன்னிக்கப்பட்ட ஒரு முழு நம்பிக்கை நமக்கு ஏற்படும் மற்றும் நமது மனம் இறைவனுக்கு ஏற்றதாக மாறும் நாமும் நரகத்தை தவிர்த்து இறைவனிடம் போக முடியும்.


















Thursday, April 24, 2008

மதங்கள் உருவான வரலாறு

அன்பானவர்களே இந்த நாட்களில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு மதம் என்னும் வார்த்தை மனிதனை "மதம் பிடித்தவனாக" ஆக்கி அனேக தீய செயலுக்கு வழிகாட்டியாய் அமைகிறது. இன்று உலகில் பல்வேறு பெரிய சிறிய மதங்கள் இருக்கின்றன.
.
ஆனால் எந்த ஒரு மதத்தை எடுத்துகொண்டாலும் அதன் சாராம்சமாக நல்ல சிந்தனை, நல்ல நோக்கம். நல்ல செயல்கள், பிறருக்கு தீங்கிழைக்காமை, திருடாமை, பொய் சொல்லாமை, நீதி நேர்மை போன்ற உயர்ந்த தத்துவங்களை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. இவை எல்லாமே ஒரே இறைவனை தான் சுட்டி காடுகின்றன என்றாலும் இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிய காரணம் என்ன என்பதை சற்று ஆராய்வோம்.
.
ஆதியில் இறைவன் தன்னை எப்படி வேண்டுமாலும் வழி படலாம் என்றும் எந்த விதத்தில் வழி பட்டாலும் அது தன்னையே வந்து அடையும் என்றும் தனது அடியார்களுக்கு விளக்கி இருந்தார்
.
எனவே மனிதர்கள் இறைவனை கும்பிடும் போது ஒரு ஒருமனப்பாடு வர வேண்டும் என்பதற்காக உருவங்களையும் சிலைகளையும் வைத்து வழிபட ஆரம்பித்தனர். நாளடைவில் மனிதன் இறைவனின் வார்த்தைகளுக்கும் அவர் காடிய வழிகளில் வாழ்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல். சிலைகளுக்கு செய்யும் பூஜைகளிலும், சிலைகள் இருக்கும் இடத்தின் மேல் ஒரு வைக்ராக்கியமும் உள்ளவனாக மாறி அதை பிறன் தொடக்கூடாது, கீழ் ஜாதி சிலை இருக்கும் இடத்தினுள் வரக்கூடாது என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களை தானே வகுத்துக்க்கொண்டான் அகவே உண்மையான இறைவனின் வழியாகிய நன்மை, நீதி, நேர்மை, அங்கு மறைந்து போனது
.
எனவே இறைவன் பல்வேறு இறை மனிதர்களை அனுப்பி தனது உயரிய நோக்கம் என்ன என்பதை போதிக்கலானார் புத்தர், மகா வீரர், குருநானக், போன்றவர்களின் போதனைகளை படித்து பார்த்தல் அது புரியும் அவை போதிப்பதெல்லாம் ஒரு உன்னதமான நல்ல வாழ்க்கை முறையே. ஆனால் மனிதன் அவர்கள் சொல்லிய நல்ல காரியங்களை செய்வதை விட்டு விட்டு அவர்களுக்கே சிலை வைத்து புது புது மதங்களை உருவக்கிகொண்டான்.
.
பாவம் செய்பவன் முடிவு நரகம் என்று நித்ய வேதனையான இடம் என்பதை தெளிவாக அறிந்த இறைவன் மூசா என்ற மோசேயிடம் 10 கட்டளைகள் மன்றும் அவரின் நீதி நியாயங்கள் போன்றவற்றை தெரியப்படுத்தினார். அதன் படி கொடிய பாவம் செய்தவன் கொலை செய்யபட வேண்டும் என்றும் சாதாரண பாவம் செய்தவன் பலியிட்டு பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கட்டளை இட்டார். அது தான் "தோரா" என்னும் வேதமும் "ஜூடாயிசம்" போன்றவை. (கிறிஸ்த்தவத்தில் பழைய ஏற்பாடு). நமது பாவத்துக்காக இன்னொரு ஜீவன் துடிதுடித்து சாகிரத்தை பார்த்தாவது இனி பாவம் செய்ய மாட்டான் என்று இறைவன் நினைத்தார்.
.
ஆனால் மனிதன் இரக்கமற்றவனாகி பாவம் செய்து செய்து பலியிட்டு அதை புசிப்பதிலும், பாவம் செய்த மற்றவனை கொடுமையாக தண்டிப்பதிலுமே தனது தலையாய கடமை போல நடந்து கொண்டான்.
.
அதனால் வேதனையுற்ற இறைவன் இயேசுவை அனுப்பி "பலியை அல்ல இரக்கத்தையே விருபுகிறேன்" என்றும் "தன்னில் பாவம் இல்லாதவன் அடுத்தவனை முதலில் தண்டிக்கட்டும்" என்றும் நீ உன் சகோதரனுடைய குற்றங்களை மன்னிக்க விட்டால் உன் பாவங்கள் மன்னிக்க படாது என்றும்" போதிக்க வைத்தார்
.
ஆனால் மனிதன் அவருக்கும் சிலை வைத்து அவர் அம்மாவுக்கும் சிலை வைத்து வணங்குவதோடு அவர் போதித்த வார்த்தைகளாகிய "உன்னிடத்தில் கேட்பவன் எவருக்கும் கொடு" "ஒரு கன்னத்தில் அடித்தல் மறுகன்னத்தை திருப்பி கொடு" "பூமியில் உனக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம்" போன்ற அருமையான கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு தனக்குள்ளே பல பிரிவினையோடு ஏதேதோ செய்துகொண்டு இருக்கிறான்.
.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?
.
அன்றிலிருந்து இன்று வரை எதக்குமே முழுமையாக கீழ்படிய விரும்பாத மனித வர்க்கம்தான். கீழ்படிந்தவர்கள் எல்லாம் மென்மையான வாழ்க்கை வாழ்ந்து இறைவனடி சேர்ந்து விட்டனர். பல பிறப்பு, சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டும் கீழ்படியாத கூட்டங்கள் கடைசி நியாய தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கின்றன
.
பொய் சொல்வது பாவம் என்று எல்லா மதமும் சொல்கிறது ஆனால் எத்தனைபேர் துணிந்து பொய் சொல்கிறோம் சொல்லிவிட்டு, வியாபாரத்தில் பொய் சொல்லலாம், விற்பனை அதிகாரி பொய் சொல்லியே ஆக வேண்டும், இந்த காலத்தில் பொய் சொல்லாமல் இருக்க முடியாது என்றெல்லாம் தத்துவம் பேசுகிறோம்.
.
அதுபோல் திருடுவது, லஞ்சம் வாங்குவது, பிறனை ஏமாற்றுவது எல்லாம் பாவம் என்று எல்லா மனசாட்சிக்கும் நன்றாக தெரியம் ஆனாலும் அந்த லஞ்சத்தை வெகுமானமாக வாங்கலாமா, பொருளாக வாங்கலாமா அதை எப்படியாவது ஒரு வழியில் வங்கவேண்டுமே என்று துடிக்கிறோம்
.
இறைவனை பற்றி சொல்வதைவிட ஒரு நடிகையை பற்றியோ அல்லது பணம் சம்பாதிப்பது பற்றியோ, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பற்றியோ பேசினால் கேட்க அநேகர் ஆர்வமுடன் உள்ளனர்.
.
இப்படி மனிதனின் இருதயமானது மகா கேடுள்ளதாகவும் இருப்பதால் அவனை நரகம் போவதில் இருந்து தடுப்பதர்க்காகதான் இறைவன் சட்ட திட்டங்களை மாறுகிறார் ஆனால் மனிதன் அப்படியே தான் இருக்கிறான் ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு மதமாக உலகில் உள்ளன.
நிறைவாக சொல்கிறேன்
.
ஒரே ஒரு வழி தான் உண்டு!
அது இறைவன் ஒருவருக்கே தெரியம்!
.
அதை இறைவனிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்குள் இறைவன் வைத்திருக்கும் மனசாட்சிக்கும் உங்கள் மனதுக்கு தெரிந்த நீதி நியயங்களுக்கும் முழுமையாக கட்டுபட்டு நடவுங்கள் அப்பொழுது இறைவன் அந்த வழியை தெரிவிப்பார்.
.
அல்லது "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே என்னிடம் வாருங்கள்" என்று சொன்ன இயேசுவிடம் வாருங்கள் அவர் அந்த வழியை கண்டடைய உங்களுக்கு உதவுவார்.
"கேட்டுக்கு போகும் வாசல் விசாலமானது அதில் அநேகர் செல்கின்றனர், ஆனால் ஜீவனுக்கு போகும் வழி மிக குறுகியது அதை கண்டு பிடிப்பவர் சிலரே"
.
இந்திய வருமானவரி சட்டம் 1961ம் வருடம் இயற்றப்பட்டது. அப்பொழுது வருமானவரியை முன்பணமாக கட்டுதல் (அட்வான்ஸ் டாக்ஸ்) , சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) போன்ற எதுவும் கிடையாது ஆனால் பல்வேறு கால கட்டங்களில் அவை எல்லாம் தேவைக்கு ஏற்ப புகுத்தப்பட்டன. இன்று வரி கட்டுபவர்கள் நடை முறையில் உள்ள விதிகளின் படித்தான் வரி கட்டவேண்டுமே தவற 1961ம் வருடம் உள்ளதுதான் அடிப்படையானது அதில் உள்ளது போல் தான் கட்டுவேன் என்று சொன்னால் தண்டனை தான் கிடைக்கும்.

அதொபோல் தான் இறைவனின் சட்டங்களும். அவர் காலத்துக்கு ஏற்றார் போல் பல விதிகளை மாற்றுகிறார் சில விதிகளை சேர்க்கிறார் காரணம் மனிதன் எப்படியாவது பரிசுத்தம் அடைய வேண்டும் என்பதுதான் நாம். அதை விட்டுவிட்டு ஆதியில் சொல்லப்பட்டது தான் உண்மையானது என்று போவோமாகில் அது தண்டனைக்கு எதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை!

Tuesday, April 22, 2008

வாழ்க்கையில் துன்பங்கள் பிரச்சனைகள் ஏன்?

அன்பர்களே! இன்று அநேகர் மனிதில் எழுந்துள்ள மிக பெரிய கேள்வி என்னவென்றால் "நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை, இறைவன் ஏன் எனக்கு இவ்வளவு பெரிய துன்பங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கிறார்?" என்பது தான்.
.
உலகில் உள்ள அனேக மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு அல்லது தானாகவே அதில் போய் விழுந்துவிட்டு பிறகு வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்கள், புலம்புகிறார்கள், அழுகிறார்கள்.
.
பிரச்சனையே இல்லாத மனிதன் எவரும் இல்லை தான், ஆனால் சில நேரங்களில் கொடிய நோய், விபத்து, அன்பானவர்கள் மரணம், வேலை இல்லாமை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை போன்ற மிக பெரிய பிரச்சனை வந்து இனிமேல் எதிர்காலம் என்ற ஒன்று நமக்கு உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நம்மை தாக்கி நிர்மூலமாக்கி விடுவதை வாழ்வில் பலர் உணர்ந்திருக்கலாம்.
.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்பதை யாரும் அமர்ந்து ஆராய்வது கிடையாது. ஒரு மிகப்பெரிய அடர்ந்த மரம் நம் கண்ணுக்கு நன்றாக தெரியும், ஆனால் அந்த மரத்தை தங்கி நிற்கும் அடிப்படையான வேர் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. மரத்தை எவ்வளவு தான் வெட்டினாலும் மீண்டும் மீண்டும் துளித்து விடும் ஆனால் வேரை கண்டு பிடித்து அகற்றினால் மீண்டும் அந்த மரம் வளராது. அதுபோல் நமக்கு ஒரு பிரச்சனை, துன்பம் என்றால் அந்த துன்பம் யாரால் வந்தது என்று நோக்குவது தவறு அதற்கு அடிப்படையான காரணம் நம்முடைய தவறாக தான் இருக்கும் அதை ஆராய்ந்து அகற்ற வேண்டும் .
.
அநேகர் தான் ஒரு பரிசுத்தவானாகவும் இறைவன் தவறுதலாக அந்த துன்பத்தை தனக்கு கொடுத்து விட்டதாகவும் நினைக்கின்றனர். சிலர் ஆண்டவன் என்னை ஏன் இப்படி சோதிக்கின்றான்? என்கின்றனர். சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய் தனக்கு நன்னை கொடுத்த ஆண்டவனுக்கே கண் இருக்கிறதா என்று கேட்கின்றனர்.
.
இறைவன் சார்பில் நான் சொல்லும் வார்த்தை என்னவென்றால் இறைவன் மகா நீதிபரர், அவர் சர்வ லோகத்துக்கும் நியாயாதிபதி, அவர் நியாயகேடு இல்லாத சுத்த தேவன் அவர் யாரையும் நியாயம் இல்லாமல் தண்டிப்பதும் இல்லை காரணம் இல்லாமல் யார் கையிலும் இருந்து எதையும் பிடுங்குவதும் இல்லை, யாரையும் தீமையால் சொதிப்பதிம் இல்லை,
.
நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் நாமே அன்றி வேறு யாரும் அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
.
ஏன் மகன் 6மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். அது போல் தான் மனிதர்களும். தன் கண்ணுக்கு மனதுக்கு இன்பமாக தெரிவதை எல்லாம் அடைய, அனுபவிக்க கடுமையான முயற்சி செய்கின்றனர் கடைசியில் சூடு பட்டு துன்பத்தில் மாட்டி கொள்கின்றனர்.
.
தீ சுடும் என்றும், மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதும் பல முறை அனுபவப்பட்ட நமக்கு தெரியும் ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது. அதுபோல நித்யமாக இருக்கும் இறைவனுக்கு எது யாருக்கு தீமையானது, எது நன்மையானது என்றும், எதை யாருக்கு எப்பொழுது எங்கே கொடுக்க வேண்டும் என்பதும் எதை யாருக்கு கொடுத்தால் அது தீமையாக முடியும் என்ற சகலத்தையும் அறிந்தவர்
.
அவர் தரும் காலம் வரை பொருத்திராமல் இன்பத்தை அடைய வேண்டும் என்றும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிட வேண்டும் என்றும் ஓடுபவர்களுக்கு அவர்கள் எதிபார்க்கத துன்பம் தானாகவே வந்து சேரும். அதற்கு இறைவனை குறை கூறுவது கொஞ்சமும் நியாயமல்ல!
.
இறைவனை ஒரு நல்ல பாசமுள்ள தகப்பனாகவும் நாமெல்லாம் அவரின் அன்புக்குரிய பிள்ளைகளாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். எப்படியெனில் இந்த உலகில் நமது உடம்பை பெற்ற ஒரு தாய் தகப்பன் இருந்தாலும், தாயின் வயிற்றில் நமக்கு உயிர் கொடுத்த தகப்பன் இறைவனே.
.
ஒரு நல்ல தகப்பன் தன் தன் பிள்ளைகளை காரணம் இல்லாமல் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டான் உலக தகப்பனே அப்படி இருக்கும் போது நமது பரம தகப்பன் அப்படி செய்வாரா? "உன்னை பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை, என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன்" என்று சொல்லும் இறைவன் ஒரு போதும் நம்மை காரணம் இல்லாமல் கண்டிக்கவே மாட்டார். "
.
மேலும் ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளையை எதற்காக கண்டிக்கிறான் என்று ஆராய்ந்தால் எனக்கு தெரிந்தவரை:
.
1. பிள்ளையின் கீழ்படியாமை
2. பிள்ளையின் பாவ செயல்கள்
3. பிள்ளையின் எதிர்காலம்
4. சகோதரருக்குள் ஒற்றுமை இன்மை
5. அடுத்தவர்களின் புகார்கள்
இவற்றில் எதாவது ஒரு காரணமாகத்தான் இருக்க முடியும்.
இவற்றை பற்றி சற்று விபரமாக ஆராய்வோம்....

Tuesday, April 15, 2008

அடுத்தவன் மனைவி ஓர் ஆபத்தான படுகுழி!

"மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்" என்பதுபோல், தனக்கு எவ்வளவு தான் அழகான அருமையான மனைவி கிடைத்திருந்தாலும் பிறன் மனைவியின் மீது ஒரு ஈர்ப்பு வருவது தவிக்க முடியாத ஒன்றாக அனேகருக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கொஞ்சம் அழகு குறைந்த மனைவி கிடைத்தவர்களை பற்றி சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
.
வேலை ஸ்தலத்தில், பஸ்ஸில் பயண நேரங்களில், கூட்ட நெரிசலில், சினிமா தேட்டரில், ஏன் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக கூட உள்ளே எட்டிப்பார்த்து ரசிக்கும் எவாளவோ பேரை நாம் இந்த உலகில் பார்க்க முடியும்
.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், இரவு அடுத்த வீட்டுக்கு போய் அந்த பெண்ணின் கணவர் அந்தப்பக்கம் படுத்து கிடக்கும் போதே இவர் இன்னொருபக்கம் படுத்து நோண்டிய சம்பவம்கூட உண்டு அது போன்று எத்தனையோ சம்பவங்களை பார்த்துள்ளேன்.
.
உயிர் நண்பன் என்று வீட்டுக்கு அழைத்து வந்தவனே தனது உயிர் மனைவியை தள்ளிக்கொண்டு ஓடிவிட்ட பல துரோக செயல்களை பார்த்திருக்கிறேன் அதுபோல் தான் உயிர் காதலனுக்காக(?) மனைவி/கணவன் பெற்ற பிள்ளைகள் இவர்களையே கொன்றவர்களையும் கூட நாம் செய்தி தாளில் படித்திருக்கிறோம்
.
வயித்தியம் பார்க்க வரும் பிறன் மனைவியை பார்த்து பயிதியமான டாக்டர் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். இன்னும் சாமியார்கள், தொழிலதிபர்கள், பணக்காரன் ஏழை என்று யாரையுமே இந்த ஈர்ப்பு விட்டு வைப்பது இல்லை
.

இப்படி பிறன் மனைவியை இச்சிப்பது என்பது மனிதனின் வாழ்க்கையை அடியோடு அழித்து விடக்கூடிய மகா பாவமாகும்
.

இந்து புராணங்களில் பிறன் மனைவியை இச்சித்து வேதனை அடைந்தவர்கள் அநேகர் இருந்தாலும், இராவணன் என்ற மாமனிதனே அதற்கு சரியான உதாரணம்! பிறன் மனைவியின் மீது கொண்ட மோகத்தால் தனது தவ வலிமை இழந்து நாட்டை இழந்து வீட்டை இழந்து அனைத்தையும் இழந்து அகால மரணம் அடைந்தான். மனம் திரும்ப பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டும் அவனால் திரும்ப முடியவில்லை
.

கிறிஸ்த்தவ வேதத்தில் இறைவன் 10கட்டளைகளில் ஒன்றாக "பிறன் மனைவியை இச்சியாது இருப்பாயாக" என்று கட்டளை இட்டுள்ளார். மற்றும் "பிறன் மனைவியை தொடுகிறவன் எவனும் ஆக்கினை தீர்ப்புக்கு தப்பான்" என்றும், ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்கிறான்" என்றும் விபச்சாரகாரன் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் இடத்தில் பங்கடைவான் என்றும் மிக கடுமையாக எச்சரிப்பு கூறப்பட்டுள்ளது.
.

எனவே இறைவனின் எச்சரிப்பை மனதில்கொண்டு பிறன் மனைவியை இச்சிப்பதை முற்றிலும் தவிர்ப்போமாக இல்லையெனில் ஆக்கினை தீர்ப்பாகிய நரக அக்கினிக்கு தப்பிப்பது மிகவும் கடினம்!
.

பிறன் மனைவி கொடுத்த மாந்த்ரீக வசிய மருந்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிம்பு வரை சென்று நரக பாதளத்தையும் பார்த்து தப்பித்து வந்ததால் இந்த எச்சரிப்பு செய்தியை அடியேன் எழுதுகிறேன்.

SUNDAR



பயம் ஓர் பயங்கரம்

"பயம்" என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தை இன்றைய உலகில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு மிகப்பெரிய சக்தியாக உள்ளது. பயம் என்பதே இல்லாத மனிதனே இருக்கவே முடியாது என்று கூட கூறலாம்.

எதிர்காலத்தை பற்றிய பயம், மரணத்தை பற்றிய பயம், பிள்ளைகள் பற்றிய பயம், நோயை குறித்து பயம், திருடன் குறித்து பயம், வேலையே பற்றிய பயம், உறவினர்கள் பற்றிய பயம், தீவிரவாதம் குறித்து பயம், சாமி பற்றி பயம், பேய் பிசாசு குறித்த பயம், சுய கௌரவம் பற்றிய பயம், குடும்ப மானம் பற்றிய பயம், இருக்க இடம் குறித்து பயம், குடிக்க தண்ணீர் குறித்து பயம், உண்ணும் உணவு குறித்து பயம், வானத்தை குறித்து பயம், பூமியை குறித்து பயம், கடலை குறித்து பயம், மலையை குறித்து பயம்

அப்பப்பா எத்தனை விதமான பயங்கள்!
.
இதுபோல் பல்வேறு விதமான பயங்களுடன் மனிதனின் வாழ்க்கை ஒவொரு நாளும் நகர்கிறது. அது பெரியவன் சிறியவன் கடவுளை நம்புபவன் நம்பாதவன் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை.
.
குடிசையில் இருப்பவனுக்கு நாளைய உணவுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்ற பயம் என்றால் கோபுரத்தில் இருப்பவனுக்கு சேர்த்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பயம்.
.
ஏன் உலக நாடுகளுக்கு ஜார்ஜ் புஷ்ஐ நினைத்து பயம் என்றால் ஜார்ஜ் புஷ்க்கு பின்லேடன் குறித்து பயம்.
.
இது போதாதென்று விஞ்ஞானிகள் அவ்வப்பொழுது இன்னும் 20 ஆண்டுகளில் அது இருக்காது, இது இருக்காது வடதுருவம் உருகிவிடும் தென் துருவம் நிரம்பிவிடும், சூரியன் சுட்டெரிக்கும் என்று அடிக்கடி தங்கள் பங்குக்கு எதாவது சொல்லி பயம் காட்டுவது வழக்கமாக போய்விட்டது.

ஒவொரு நாளும் இப்படி பயந்து பயந்து வாழவா இறைவன் நம்மை படைத்தார்? இந்த பயத்தின் மூல காரணம் தான் என்ன?
ஒன்றே ஒன்று தான் அது:
.
இறைவனை முழுமையாக அறியாமையே!
.
சர்வத்தையும் ஆண்டு நடத்தும் இறைவனை மிக பெரியவர், அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் அவரன்றி அணுவும் அசையாது என்றெல்லாம் பெரிய பெரிய தத்துவம் பேசுபவர்கள் கூட, தனக்கு ஒரு சிறிய பிரச்சனை, நோய் என்று வந்து விட்டால் தான் கும்பிடும் அந்த இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து காத்திருக்காமல் பயந்து பல்வேறு இடங்களுக்கு ஓடுகின்றனர்? யார் யாரை எல்லாமோ தேடுகின்றனர்.
காரணம் என்ன?
.
அவர்கள் இறைவனை அறியவேண்டிய விதமாக அறியவில்லை என்பதுதான்.
.
இறைவனை சரிவர அறியாததால் அவரது மன விருப்பத்தை அறியமுடியாமல் அவர் எதிபார்க்கும் குறைத்த பட்ச சத்தியத்துக்கு கீழ்படிந்து நடக்க முடியாமல் பாவம் செய்து, பிரச்சனைகளில் இருந்து இறைவன் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை இழக்கின்றனர்

பாவமே பயத்தை கொண்டுவரும்.
.
"பொய்யர் இரண்டாம் மரணமாகிய அக்கினிகடலில் பங்கடைவாவார்கள்" என்று சொல்லும் போது பொய் பேசுபவருக்கு கண்டிப்பாக பயம் வருகிறதல்லவா? நீங்கள் பொய் பெசுபவறல்ல என்றால் பயம் வராது அது போலத்தான் பாவமே பயத்தை கொண்டு வரும். (பயந்து உடனே பொய் பேசுவதை நிறுத்தப்போவது இல்லை அது வேறு விஷயம். பிரச்சனை வந்தால் தானே கடவுளை தேடி ஓடுவோம் அது போல் அக்கினி கடலுக்குள் போன பிறகு தானே அனேகருக்கு அறிவு வரும்)
.
பாவம் தான் பயத்துக்கு முதல் காரணம். ஆதமும் ஏவாளும் இறைவன் புசிக்காதே என்று சொன்ன கனியை புசித்ததும் இறைவனை பார்க்கவே பயம் வந்து ஓடி ஒளிந்து கொண்டனர். பாவம் என்பது மனிதனை அந்த பரிசுத்தம் உள்ள இறைவன் முன் நிற்க முடியாமல் நிர்வாணமாக ஆக்குகிறது.
பல வேளைகளில் நாங்கள் கும்பிடும் இறைவனே பயத்து ஓடி இருக்கிறார் குழந்தை போல எங்களை துன்புறுத்தி விளையாடுகிறார் அப்படி இருக்கையில் நாங்கள் பயப்படுவதில் தவறில்லை என்கிறீர்களா.
.
ஆமாம்! சாதரண மனிதனைப்போல் காமத்துக்கும், பயத்துக்கும், பொறாமைக்கும், யார் பெரியவன் என்ற போட்டிக்கும் அடிபணிந்து போகும் தேவர்களை இறைவன் என்று நினைத்து வணங்கினால் பயம் நம்மை ஒருபோது விடாது!
.
"பயப்படுகிறவர்கள்" இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலிலே பங்கடைவார்கள் என்று பைபிள் (வெளி 21:8) சொல்கிறது.
.
உண்மை இறைவனை அறிந்து அவர் வார்த்தைப்படி வாழ்ந்து பாருங்கள் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையே இல்லை. எங்கு எது இல்லாமல் போனாலும், எங்கு என்ன நடந்தாலும் எனக்குள்ளதை இறைவன் பாதுகாப்பார் என்றும், வானமே இடிந்து விழுந்தாலும் அது என்னை ஒரு போதும் அணுக முடியாது அசைக்க முடியாத நம்பிக்கையும் வரும்.
.
அது ஒன்று தான் பயத்தை புறம்பே தள்ளும் .

Monday, April 14, 2008

நன்மையை தரக்கூடிய பொய் சரியானதா?

நாம் காணும் இந்த உலகத்தில் பொய் என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. அது ஒரு பாவமாகவோ தவறான செயலாகவோ யாருக்கும் தேரிவதில்லை. பொய் சம்பந்தமான கீழ்க்கண்ட விதமான கோட்பாடுகள் பரவலாக எல்லாராலும் பேசப்படுகின்றன
  • "இந்த காலத்தில் பொய் சொல்லாமல் வாழவே முடியாது" .
  • "நான் செய்யும் தொழிலில் பொய் சொல்லாமல் இருக்க முடியாது"
  • "பிறருக்கு தீமை இல்லாமல் பொய் சொல்வதில் தவறல்ல"
  • "நன்மை பயக்குமானால் பொய் சொல்லலாம்"
நமது தெய்வ புலவர் திருவள்ளுவர் கூட:, .

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்".
குற்றமற்ற நன்மை பயக்குமானால் பொய் சொல்வதும் உண்மை என்று கருதப்படும்"
என்று சொன்ன அவரே

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்றும் சொல்லி இருப்பதால் "தீமை இல்லாத பொய் குற்றமல்ல" என்ற அவர் வார்த்தையில் உள்ள மெய் பொருளை கொஞ்சம் பார்க்கலாம்.
.
இந்து மத புராணங்கள் படி ஒரேஒரு பொய் சொன்ன தர்மன் நரகம் போய பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றால், பல பொய் சொல்லும் நபர்களை பற்றி கேட்கவே வேண்டிய தேவையே இல்லை.

கிறிஸ்தவ வேதப்படி "பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலிலே பங்கடைவார்கள்" என்றும் "பொய் நாவை கர்த்தர் வெறுக்கிறார்" "நீங்கள் அவனவன் பிறரோடே உண்மையை பேசுங்கள்" என்றும் திட்டமாக கூறப்ப்பட்டுள்ளது.

திருக்குரான் படி : "உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" "பொய்யர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும்" "இறுதி நாளில்.. பொய்யர்கள் நஷ்டம் அடைவார்கள்" என்று உறுதியாக எச்சரிக்கப்படுள்ளது.
.
இவ்வளவு உறுதியாக பொய் சொல்லக்கூடாது என்று எல்லா மதங்களும் சொல்லும்போது, கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நாம் எவ்வளவு ஈசியாக பொய் சொல்கிறோம் பாருங்கள். பிறகு எப்படி தண்டனைக்கு தப்புவோம்!.
"ஒருவன் இன்னொருவனை கொலை செய்ய விரட்டி வரும் போது நமது வீட்டினுள் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்வது தவறல்ல" என்பது அநேகரின் வாதம்.

அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி "நீங்கள் பொய் சொல்லி காப்பற்றி விட்ட அவன், நாளை அனேக ரவுடிகளுடன் போய் தன்னை விரட்டியவன் குடும்பத்தையே அழித்துவிட்டால், அந்த குடும்பம் அழிய காரணம் நீங்கள் ஆகிவிடுவீர்களே!
.
அதுபோல் நல்லது நடக்கும் என்று போய் சொல்லி அது தனக்கே தீமையாக மாறி துன்பம் அனுபவித்தவர் எத்தனையோபேர்!
நாம் செய்யும் ஒரு செயலின் எதிர்கால விளைவு மற்றும் நன்மை தீமை இவற்றை தீர்மானிக்கும் திறன் நமக்கு இல்லாத காரணத்தால் வேதங்களின் எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு பொய்யாய் முற்றிலும் தவிர்த்து தண்டனைக்கு தப்புவோமாக.

Thursday, April 10, 2008

இறைவன் ஏன் உருவ வழிபாட்டுக்கு தடை விதித்தார்?

இறைவன் ஏன் உருவ வழிபாட்டுக்கு தடை விதித்தார்?

ஒருநாள் நான் எனது இந்து நண்பர் ஒருவரிடம் பைபிளில் இறைவன் "தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (அதாவது கடவுள் ஒருவரே கடவுள்) அவரன்றி வேறு ஒரு தெய்வம் உனக்கு வேண்டாம்" என்றும் "ஒரு விக்ரகத்தையோ, சுரூபத்தயோ உண்டாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்" என்று இறைவன் கட்டளை இட்டுள்ளார் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் உடனே " ஒரு உருவத்தை வைத்தோ, ஒரு பெயரை சொல்லியோ வழிபடுவதில் என்ன தவறு? நம் ஒருமனபாட்டுக்கு அது மிகவும் அவசியமாக இருக்கிறதே. ஒன்றுமில்லாத ஒன்றை பார்த்து பேசுவதை விட ஒரு உருவத்தை பார்த்து நமது குறையை சொல்வதிலோ அதை கும்பிடுவதிலோ என்ன தவறு இருக்க முடியும்" உங்கள் இறைவன் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.எதை பேசினாலும் நியாயத்தோடு பேசு என்று சொல்லிவிட்டான்.

ஏன் மனதில் பல குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது மகா நீதிபரரான இறைவன் நியாயம் இல்லாமல், ஒரு சிலையை வழி படுவதை மிக பெரிய பாவமாக அதுவும் முதல் கட்டளையாக ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி என்னை துளைத்தது தூக்கம் வரவில்லை.

எனது வழக்கப்படி இறைவனிடம் சென்று அமர்ந்தேன் "ஆண்டவரே இந்த கேள்விக்கு எனக்கு சரியான பதில் தரவேண்டும் நீர் மகா நீதிபரர் நீர் சொல்லும் எதுவும் நியாயம் அற்றதாக் இருக்காது" என்று சொல்லி மன்றாடினேன்.

அப்பொழுது இறைவன் கொடுத்த ஆச்சர்யமான பதில் இதோ!

"ஆதி காலத்தில் உருவம் வைத்து வழி பட்ட யாரையும் நான் தவறு என்று சொன்னதில்லை. உண்மையாய் இறைவனை தேடுபவர்கள் எந்த விதத்தில் வழிபட்டாலும், என்ன பெர்யர் சொல்லி அழைத்தாலும் அது என் சமூகத்துக்கு வந்து எட்டும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மனிதன் தீய சக்திகள் உதவியால் மந்த்ரீக வித்தைகளை கற்று, இன்றைய உலகத்தில் ஒருவன் பெயரை சொன்னால் போதும் அவன் ஜாதகத்தையே கணித்து சொல்லும் அளவுக்கு வளர்ந்தது விட்டான்.அமாவாசை இரவு நடு ஜாமத்தில் இந்த பூமியின் சுழர்ச்சி முறையை அறிந்து என்னிடம் இருந்து மக்களை பிரிக்க போராடுகிறான்
இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஆனால் இந்த உலக மக்கள் வழிபடும் எல்லா படங்களும் எல்லா உருவங்களும் மாந்த்ரீக தலைமை இடமாகிய "மலையாளத்தில்" (கேரளாவில்) மந்திரத்தால் பூமிக்கு அடியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒரு முறை அந்த இடங்களை எல்லாம் கூட என் கண்முன் காட்டினார்.

எனவே நீங்கள் அப்படி கட்டப்பட்ட ஒரு உருவத்தை வழிபடும் போதும் எந்த ஒரு ஆபத்து நேரத்தில் அதை நோக்கி கூப்பிட்டாலும் அது என்னை வந்து எட்டாது என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. அத்தோடு கூட கடவுள் அல்லாத ஒன்றை வழிபட்ட பாவமாக கூட அது மாறிவிடும் மேலும் நீங்கள் புதியதாக ஒரு உருவத்தை வைத்து வழி பட்டாலும் அது மாந்த்ரீக உலகத்துக்கு உடனே தெரிந்துவிடும் அந்த படமும் அங்கு கொண்டுபோகப்படும்.
.

நான சொல்லும் இந்த காரியம் உனக்கு புரிவது கடினம். ஆகினும் இந்து புராணங்களில் கூட உருவம் உள்ள சாமிகளை மந்திரம் ஓதி ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கிரியை செய்ய முடியாமல் தடுத்த சம்பவங்களும் உள்ளன" எனவே தான் நீங்கள் எனக்கு பெயர் வைக்க வேண்டாம் உருவம் வைக்க வேண்டாம் என்று கட்டளை இட்டேன்" என்று சொன்னார்

எதுவும் சந்தேகம் இருந்தால் முன் வைக்கவும் இறைவனிடம் அமர்ந்து விசாரித்து பதில் எழுதப்படும்.

Wednesday, April 9, 2008

தலைவிதி என்று ஒன்று உண்டா?

தலைவிதி என்று ஒன்று உண்டா?

சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு அது "அவன் தலை விதி" என்று சொல்லி மனிதர்கள் முடித்துவிடுவர். இந்து மதத்தில் "ஊள்வினையின் பலன்" என்று இதற்க்கு பெயரிடப்பட்டு பரவலாக எல்லோராலும் நம்பப்படுகிறது. கிறிஸ்த்தவத்தில் விதியை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லப்பட வில்லை என்றாலும் "நாள் பார்க்காமலும், குறி கேளாமலும் இருப்பாயாக" என்று சொல்வதன் மூலம், நாளை என்ன நடக்கும் என்பதை அறிய முயலாதே அது இறைவனின் கையில் உள்ளது என்று முடித்துவிட்டது. "இஸ்லாத்தில் விதியை பற்றி சர்ச்சை எழுப்பக்கூடாது" என்று சொல்லி அதற்கு எந்த விளக்கமும் இல்லாமலே விடப்பட்டுள்ளது.
.
உண்மையில் விதி என்று ஒன்று உண்டா?
ஒருமுறை நான் எனது நண்பர் ஒருவரிடம் இறைவனை பற்றி விளக்கி சொல்லி நேர்மையான வழியில் வாழ முயற்சிக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் என்னிடம் நான் உங்களை ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். என்ன என்றேன் "நாம் இருவரும் இன்று இந்த இடத்தில் நிற்று இறைவன் பற்றி பேசுவோம் என்பது இறைவனுக்கு முன்கூட்டியே தெரியுமா தெரியாதா?" என்றார்.
நானும் சிறிது யோசித்து தெரியாது என்றேன்
.
உடனே அவர் " என்ன சார் கடவுளை இவ்வளவு குறைவாக எடை போட்டுவிட்டீர்கள், நாளை என்ன நடக்கும் என்று தெரியாதவரா ஒரு வல்லமை உள்ள கடவுள். கடவுள் மிக மிக பெரியவர் நீங்கள் அவரை சரியாக அறியவில்லை"என்று சொல்லிவிட்டார்.
.
உடனே நான் சரி ஐயா அவர் பெரியவர் தான் நாம் இங்கு நின்று அவரை பற்றி பேசுவோம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதற்கும் நேர்மையாக நடப்பதற்கும் என்ன சம்பத்தம் என்றேன்.
.
உடனே அவர்.
நாளை என்ன எங்கு எப்படி நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த கடவுளுக்கு நான் எங்கு பிறப்பேன் எப்படி வாழ்வேன் எங்கு என் வாழ்க்கை முடியும் என்பது எல்லாமே முன்கூட்டியே தெரியும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று அவர் படைத்து விட்டார் எனவே நான் இப்படித்தான் இருப்பேன். உங்களை இப்படித்தான் நேர்மையாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று படைத்துள்ளார் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்" கடவுள் படித்ததை யார் மற்ற முடியும் என்று சிம்பிளாக முடித்து விட்டார்
.
எனக்கு இரண்டு நாளாக ஒரே மன குழப்பம் கடவுள் எல்லவற்ற்யுமே முன்கூட்டி தீர்மானித்து படைத்து விட்டால் பிறகு "நீ இப்படி வாழ், நன்மை செய், நியாயம் செய் என்று நம்மை பார்த்து ஏன் கூற வேண்டும்? என்று ஒருபுறம் இன்னொரு புறம் "கடவுளுக்கு தெரியாத ஒரு எதிர்காலம் இருக்க முடியாதே" என்று மறுபுறமும் மிகவும் குழம்பிவிட்டேன்.
.
கடைசியில் எனது வழக்கப்படி ஒருநாள் இரவு தனிமையில் சென்று இறைவனிடம் கேட்க ஆரம்பித்தேன் "விதி என்று ஒன்று உள்ளதா? அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் என்ன என்று விளக்க வேண்டும் என்று மணிக்கணக்கில் மன்ற்றடினேன்.
.
இறைவனின் ஆச்சர்யமான பதில் இதோ!
.
ஒவ்வொரு மனிதன் படைக்கப்படும் போதும் அவன் முன் ஜென்மத்தில் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப "இங்கு இந்த தாய் வயிற்றில் பிறந்து இப்படி போய் இவ்வாறு மரணமடைவான்" என்ற விதி என்னும் ஒரு தலை எழுத்து எழுதப்பட்டு தான் பிறக்கிறான்.
.
அவன் உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டி இறைவனை தேடாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றும் உலக வாழ்க்கை வசதிகளுக்காக மட்டுமே இறைவனை தேடியும் வாழ்வான் என்றால் அந்த விதியின் கோட்டிலேயேசரியாக சென்று அதை போலவே மரணமடைவான்.
.
ஆனால் அதே விதிக்கொட்டில் போய் கொண்டிருக்கும் ஒருவன் "உலகில் நடக்கும் காரியங்களை பார்த்து, பலவிதமான வார்த்தைகளை கேட்டு பல்வேறு கேள்விகளால் குழம்பி பாதிக்கப்பட்டு ஒரு இடத்தில் நின்று "கடவுளே இங்கு என்ன நடக்கிறது, நான் எதற்க்காக இந்த பூமியில் படைக்கப்பட்டேன் உண்மையை விளக்க மாட்டீரா" என்று கதறினால் அவனுக்கு என் வழியை தெரியப்படுத்துவதொடு மட்டுமல்லாமல் அவனுக்கு எழுதப்படுள்ள விதியையே கூட மாற்றும் வல்லமை எனக்கு உண்டு" என்றார்
.
மறுநாள் என் நண்பரிடம் சென்று "உங்களுக்கு எழுதப்பட்ட விதி சரிதான். அந்த விதியின் பாதையில் கொடூரமான முடிவை நோக்கி போகும் உங்களை திருப்பத்தான் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் இந்த நிலையில் நீங்கள் இறைவனை நோக்கி கெஞ்சினால் உங்கள் விதியை மாற்றி அமைக்க அவருக்கு வல்லமை உள்ளது என்று நினைக்கிறீர்களா இல்லையா என்று கேட்டேன்.
.
உடனே அவர் எழுதிய விதியை எல்லாம் யாராலும் மற்ற முடியாது என்றார்.
.
"ஏன் நண்பரே கடவுளை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளீர் அவர் மிக மிக பெரியவர் அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை" என்று அவர் சொன்ன பதிலையே திரும்ப சொன்னேன்.
.
உடனே அவர் அது சரி அவரால் எல்லாம் முடியும் விதியை கூட மாற்ற முடியும் என்றார்
.
"அவரால் விதியை மாற்ற முடியும் என்றால் உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எதையும் அவரால் மாற்றி அமைக்க முடியும் அகவே இறைவனை தேடி நேர்மை வழியில் நடவுங்கள்' என்று சொன்னேன் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
குறிப்பு:
நான் எழுதிய இந்த செய்தியை பார்த்து எல்லோரும் அவரவர் ஊள்வினையின் படி திரும்ப திரும்ப பூமியில் பிறந்துகொண்டு இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். இயேசு என்னும் ஒருவர் இந்த பூமியில் அவதாரம் எடுத்து பாவத்துக்காக மரிக்கும்வரை அதுபோல் இருந்த சுழர்ச்சி முறை பல்வேறு பயங்கரமான நிகழ்வுகளினால் அவர் மரணத்துக்கு பின் மாறி இன்று சொர்க்கம் நரகம் என்ற முடிவின் நிலைக்கு வந்துவிட்டது. கொடூரமான முடிவு இருப்பதால் தான் ஒருவான் தன் உடம்பையே முழுவதுமாக கிழிக்க கொடுத்து ஒரு மீட்பை வாங்கி கொடுத்தார்.
.
இப்பொழுது உள்ளபடி "பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவை அறிந்து கொள்ள பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும். அவரை ஏற்றுக்கொண்டவர் இதற்க்கு முன் எத்தனை பிறவியில் என்ன பாவங்கள் செய்திருந்தாலும் மன்னிக்கப்படும். ஏற்று பாவ மன்னிப்பை பெறாதவர் இந்த பிறவியில் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் முன் பிறவியில் செய்த பாவங்கள் அவரோடு இருப்பதால். இறைவன் முன் நியாய தீர்ப்புக்கு நிற்க வேண்டும் முடிவை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது மிக கொடூரம் நினைத்தாலே என் கண்களின் கண்ணீர் வருகிறது.
.
ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை போய் பார்க்க வேண்டி வந்தது என்று இந்து புராணமே சொல்கிறது. ஒரு தீமையான செயல் கூட நம்மை இறை ராஜ்யத்துக்கு தகுதி இல்லாதவனாக மாற்றி விடும்.

Friday, April 4, 2008

அன்பின் மூன்று வகைகள்

அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8) என்று அன்பின் அதி முக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும்


அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)

என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளை அறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்


உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. மிருக அன்பு :

மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது


இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.



உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .



2. மனித அன்பு:-


மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்

மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.


ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.


ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!


உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்



3. தெய்வீக அன்பு:

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.


தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக அருமையாக விளக்குகிறது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.


நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம் , மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும்.


யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும், பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்!

கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"