Wednesday, May 21, 2008

இறுதி முடிவு இறைவனின் கையில்!

அன்பர்களே

"இறைவன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டும்" என்று கட்டளை இட்டிருப்பதால் என் திருமணத்துக்கு முன் "யார் நமது அப்பா அம்மாவை கை விட்டாலும் எந்த சூழ்நிலையிலும் நாம் கைவிடக்கூடாது" என்று மனதில் உறுதியான தீர்மானம் எடுத்திருந்தேன்.

அதற்காகவும், ஒரு கீழ்படிதல் உள்ள மனைவி வேண்டும் என்பதற்க்க்காகவும் பட்டம் படித்த கொஞ்சம் வசதி உள்ள நான் 4ம் வகுப்பு படித்த கிராமத்தில் உள்ள ஏழை குடும்னத்தில் பெண் கொண்டேன்.

எனது அம்மாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனினும் எனக்காக விட்டுவிட்டார்கள். திருமணம் ஆன புதிதில் என் அம்மாவுக்கு என் மனைவியை மிகவும் பிடித்து விட்டது. அவ்வளவு அன்யோன்யமாக இருந்தனர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றாக தேடி நல்ல பெண்ணை கண்டுகொண்டேன் என்று!

ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைய நாள் நீடிக்க வில்லை!

ஒரு முறை என்னை பார்க்க வந்த என் மும்பை நண்பன், பேசிக்கொண்டு இருக்கும் போது சில சோகமான காரியங்களை சொல்லி அழஆரம்பித்து விட்டார். என் மனைவிக்கும் அவரை சில நாள் தெரியும் ஆகையால் அவரிடம் சென்று ஏன் அண்ணே இதற்க்கெல்லாம் அழுகிறீர்கள் எனது ஆதரவாக அவர் கையை பற்றினாள்.

அவ்வளவு தான் என் அம்மாவுக்கு வந்ததே கோபம்

அவன் கையை பிடித்து ஆறுதல் சொல்ல நீ யார்? எப்படி நீ பிற ஆணின் கையை
பிடிக்கலாம்? என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு தன் மகனின் மனைவி பிற ஆணை தொடக்கூடாது என்ற பாசம் (மேலும் அவர்கள் வளந்தது அப்படி)

என் மனிவிக்கு அதற்குமேல் கோபம் "வேறு எந்த விஷயத்தில் என்னை குற்றம் கண்டு பிடித்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன் ஆனால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத இந்த விஷயத்தில் என்னை குற்றம் கண்டுபிடித்து விட்டார்களே உங்கள் அம்மா, இனி அவர்களுடன் பேச என்ன இருக்கிறது" என்று இருவரும் எதிரிகள் போல மாறிவிட்டனர்.

15 வருடமாகியும் இன்று வரை என்னால் அவர்களை முழு சமாதானம் படுத்த முடியவில்லை.

இதில் இருந்த நான் என்ன தெரிந்துகொண்டேன் என்றால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது, நம் கையில் ஒன்றுமே இல்லை என்பதுதான்.

நாம் இப்படி அப்படி என்று பல கனவு காணலாம். ஆனால் யார் யார் யாருடன் இருக்க வேண்டும் எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்று எல்லாமே இறைவனால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது நம் கையில் ஒன்றும் இல்லை. அதற்காக நாம் நல்லதை நினைக்கக்கூடாது என்று அருத்தம் அல்ல, நாம் என்ன நினைத்தாலும் இறுதி முடிவு எடுப்பவர் இறைவன் என்பதே

நல்ல நாற்றை வாங்கிதான் நடுகிறோம், நல்ல உரம்தான் போடுகிறோம், நன்றாக தண்ணீர் பாச்சுகிறோம் ஆனால் கதிர் ஒருமுழ நீளம் வருமா அல்லது ஒரு ஜான் நீளம் வருமா என்ற இறுதி முடிவு இறைவனின் கையில்!

Friday, May 16, 2008

கெட்டுப்போன காப்பியும் மனித ஆன்மாவும்!

அன்பானவர்களே!

எனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கப் காப்பி யாரும் குடிக்காத காரணத்தால் கேட்டுபோனது. மறுநாள் அது கழிவுநீர் செல்லும் இடத்தில் கொட்டப்பட்டது. இதை பார்த்த நான், என் மனதில் இந்த நிகழ்ச்சியை ஆராய்ந்த போது கிடைத்த பதில்தான் இந்த பதிப்பு.

காப்பி வைக்கப்படும் போது எப்படி இருந்தது?

அது தயார் செய்து வைக்கப்படும் போது நல்ல மணமாகவும் சுவையாகவும்
பிறருக்கு உபயோகப்பட கூடியதாகவுமே இருந்தது.

அதுபோல் மனிதனும் இறைவனால் படைக்கப்படும் போது நல்லவனாகவும் பிறருக்கு பயனுள்ளவனாகவும் எந்த ஒரு கள்ளம் கபடம் இல்லாதவனாகவும்தான் படைக்கப்படுகிறான்

காப்பியை யார் கெட்டுப்போக வைத்தார்கள?

காப்பியை கேட்டுப்போகும்படி யாரும் எதுவும் செய்யவில்லை அது தானாகவே கெட்டுப்போய்விட்டது.

அதுபோல் மனிதனும் கெட்டுப்போக எதுவுமே செய்யவேண்டிய தேவையே இல்லை. இந்த உலகத்தில் பிறந்தாலே போதும் அவன் கெட்டுப்போகும் சூழ்நிலை தானாகவே ஏற்படும்.

காப்பி எதனால் கெட்டுப்போனது?

காற்றில் உள்ள அசுத்த கிருமிகளினால் கெட்டுப்போனது

அதுபோல் மனிதன் காற்றில் கலந்துள்ள அசுத்த ஆவிகளினாலும், உலகில் உள்ள அசுத்தங்களை ஆபாசங்களை பார்ப்பதினாலும் கெட்டுபோகிறான்.

காப்பியை கெட்டுப்போகாமல் பலநாள் வைக்க முடியுமா?

காப்பி எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் கேட்டும்போகும். அனால் அசுத்த காற்று பாதிக்கமால் பாதுகாப்பாக பல நாளாக வைக்க நல்ல அணல் அல்லது குளிர் வேண்டும்.

அதுபோல் மனிதன் இந்த உலகில் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட சர்வ வல்ல இறைவனின் அரவணைப்பு அவசியம் வேண்டும் அவர் அரவணைப்புக்குள் இல்லை என்றல் நிச்சயம் கேடுப்போவோம்.

கெட்டுப்போன காப்பியின் முடிவு என்ன?

கெட்டுப்போன காப்பி எதற்கும் உதவாது, அது கழிவுநீராக அசுத்தத்தோடு அசுத்தமாக மாறி பாதாள சக்கடைக்கு போய்விடும்.

அதுபோல் கெட்டுப்போன மனிதனும் அசுத்த ஆவிகளோடு சேர்ந்து அதன் ராஜ்யமாகிய பாதாள லோகத்துக்கு பொய் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கெட்டுப்போன காப்பியை சரி செய்ய முடியுமா?

கெட்டுப்போன காப்பியை எவராலும் சரிசெய்ய முடியாது. அனாலும் அதை நன்றாக கொதிக்கவைத்து வரும் ஆவியை குளிரவைப்பதன் மூலம் ஒரு நல்ல நீராக அதை மாற்ற முடியும்.

அதுபோல் ஒருவன் இந்த உலகுக்கு மரித்து, ஜலத்தினாலும் ஆவியினாலும் திருப்ப பிறந்தால் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதி உள்ளவனாக மாறுவான்.


அன்பானவர்களே!

இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளை பிரெஷ்சாக செய்து வைத்தாலும் ஓரிரு நாளில் தானாகவே கெட்டுப்போய்விடும். கெட்டுப்போகாமல் பாதுகாக்கவே முயற்சி தேவையே அன்றி கெட்டுப்போக எந்த முயற்சியும் தேவையே இல்லை.

அதொபோல் ஒருவன் கெட்டுப்போக ஒன்றுமே செய்ய வேண்டிய தேவையே இல்லை! அவன் இந்த உலகத்தில் பிறந்தாலே போதும் தானாகவே கேட்டு பாதளம் போய்விடுவான் என்று பார்த்தோம்.

அநேகர் நான் ஒன்றுமே செயவில்லை நான் மிகவும் நல்லவன் என்று நினைக்கின்றனர் அது தவறு நீங்கள் கெட்டுப்போனது உங்களுக்கே தெரியாது பரிசுத்தமான இறைவனிடம் வந்து பார்த்தபின்தான் தெரியும் நீங்கள் கேட்டுபோய் இருந்தது.

எனவே எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் இன்றே இறைவனிடம் வாருங்கள்.

Wednesday, May 14, 2008

பொறாமை என்னும் புற்று நோய்!

அன்பர்களே!


இன்று உலகில் எதற்குத்தான் பொறாமைபட வேண்டும் என்ற வரை முறையே இல்லாமல் போய்விட்டது. தனது பக்கத்து வீட்டுக்காரன் தன்னை விட சற்று உயர்ந்து விட்டால் பிடிப்பதில்லை. பத்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் ஒரு பிரிட்ஜ் வாங்கி விட்டால் தாங்க முடியாமல் தவிக்கிறார்.


அடுத்தவர் பொருளை பார்த்து, வேலையே பார்த்து, கணவன், மனைவியை பார்த்து, படிப்பை பார்த்து, வீட்டை பார்த்து, அழகை பார்த்து என்று எந்த ஒரு காரணத்தை வைத்தாவது பொறாமைபடுவது என்பது இந்த கால கட்டங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது.


இன்றைய உலகில் தன் சொந்த அக்கா தங்கை அண்ணன் தம்பி போன்றோர் நலமாக வாழ்வதை பார்த்து பொறுக்க முடியாமல் செய்வினை, மந்திரம் பண்ணும் அவல நிலையை கிராமங்களில் பார்க்கலாம்.


உலகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அப்படி என்றால் கிறிஸ்த்தவ சகோதர், சபையில் கூட தேவமனிதர்கள் இடையே கூட போட்டி பொறாமை நிலவுகிறது. ஒரு பாஸ்டர் நல்ல செய்தி கொடுத்தால் இன்னொருவருக்கு தாங்க முடிய வில்லை. ஒரு பாஸ்டர் ஜெபம் வீட்டில் வந்து ஜெபம் பண்ணும் போது இன்னொருவர் தற்செயலாக வந்துவிட்டால் அவர்கள் இருவரும் ஏதோ எதிரிகள் போல பார்த்துகொள்கின்றனர்.


பொறாமை வர முதல் காரணம், தனக்கு இருப்பதுடன் மன நிறைவு அடையாததும், தன்னை போல மற்றவர்களும் சுகமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாததும் தான் காரணம்.


நன்றாக யோசித்து பார்த்தால் நாம் பொறாமை படுவதில் எந்த பயனும் கிடையாது. ஒருவர் நன்றாக வசதியாக இருந்தால் தான் நாளை நாம் ஒரு அவசர தேவைக்கு ஒரு உதவிக்கு அவரிடம் போகும் போது அவரால் உதவ முடியும் அல்லது ஒரு நேர உணவாவது கொடுக்க முடியும். அவர் கஷ்டப்பட்டால் நமக்கு எந்த பயனும் கிடையாது.


நாம் கொண்டுள்ள பொறாமை ஒரு புற்று நோயை போல பிறரை விட மோசமாக நம்மை அதிகம் தாக்கும் தன்மை உடையது.


தாவீதின்மேல் பொறாமை கொண்ட சவுல் சாகும்வரை அந்த ஆவியில் இருந்து விடுபட முடியவில்லை. எல்லா வேலையையும் விட்டு விட்டு தாவீதை கொல்வதிலேயே தீவிரமாக அலைந்தான்.


எனவே தான் பைபிள்
"பொறாமை புத்தி இல்லாதவனை அதன் பண்ணும்"
"பொறாமை தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்!
என்று எச்சரிக்கிறது


ஆகையால் நாம் நலம் வாழ எல்லா காவலோடும் நம் இருதயத்தை காத்துக்கொண்டு எதற்கும் உபயோகம் இல்லாத பொறாமையை விட்டுவிடுவோமாக.
அடுத்தவர் மகிழ்ச்சியில் நாம் இன்பம் கண்போமாக!

அனேக நேரங்களில் பொறாமை நம் அனுமதி இல்லாமலே நம்முள் வருகிறது அப்படி வரும்போது இறைவனே இவரை என்னைவிட 100 மடங்கு அதிகமாக அவரை அசீர்வதியும் என்று வாய் திறந்து சொல்லுங்கள் அது ஓடியே பொய் விடும்.







Thursday, May 8, 2008

ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது?

நண்பர் வி.சு அவர்கள் ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது? என்ற மிகப்பெரிய கேள்வியை கேட்டு விட்டார். அதை சற்று ஆழமாக ஆராய்ந்த போது கிடைத்த பதில்கள் தான் இந்த பதிப்பு.
.
காரணம் 1.

இறைவன் பூமியை படைத்து அதற்கு எந்தவித தாங்குதலும் இல்லாம் அந்தரத்தில் தொங்க வைத்தார் அதிலுள்ள எந்த ஒரு பொருளும் அதை விட்டு கடந்து போகாமல் இருப்பதற்காக தாயாகிய பூமிக்கு தன்னில் உள்ள பொருட்களை ஈர்க்கும் சக்தியை கொடுத்தார். அதனால் ஆப்பிள் பழம் பூமியை நோக்கி கீழே விழுகிறது.
.
அதற்குப்பின் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சர் ஐசக் நியுட்டன் அவர்கள் பூமிக்கு உள்ள அந்த சக்தியை கண்டுபிடித்து அதற்கு புவி ஈர்ப்பு விசை என்று பெயரிட்டார் அனாலும் கி பி 4ம் நூற்றாண்டிலேயே பிரம்மகுப்தர் என்னும் குப்த அறிஞர் தனது பிரும்ம சித்தாந்தம் என்ற தனது நூலில் புவி ஈர்ப்பு விசை பற்றி குறிப்பிட்டுள்ளார்
.

இது மட்டுமா காரணம் இன்னும் உண்டு
காரணம் - 2

பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் தன்னை போன்ற உயிரினங்களை உருவாக்கி பூமியை நிரப்ப வேண்டும் என்ற இறைவனின் திட்டப்படி தொடர்புடைய பொருட்களுக்கு ஒன்றை ஒன்று ஈர்க்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியை கொடுத்தார்.
.
ஆப்பிள் பழத்தில் உள்ள விதைக்கு தன் உருவான மரத்தை போல மரத்தை உருவாக்கும் வல்லமையை கொடுத்தார் பூமிக்கு அத விதையை உயிர்ப்பிக்கும் ஜீவனை கொடுத்தார் தொடர்புடைய பொருட்கள் அந்த ஈர்க்கும் சக்தியால் ஒன்று சேர்கின்றன அதனால் ஆப்பிள் கீழே விழுகிறது.
.
அதுபோலத்தான் குழந்தை தன் தாயை ஈர்க்கிறது அதற்கு பாசம் என்று பெயரிடுகிறோம்
பெண் ஆணை ஈர்க்கிறது அதற்கு காதல் என்று பெயரிட்டுள்ளோம்
பூ வண்டை தன் வாசத்தால், தேனால் ஈர்க்கிறது
நீர் வேரை தன்னை நோக்கி ஈர்க்கிறது
.
காரணம் - 3
.
பூமியில் தோன்றும் எந்த ஒன்றும் தான் உருவான இடத்தில் நிலையாக இருக்க முடியாது, காலம் வரும் போது தான் எந்த நிலையில் இருந்தாலும் அதிலிருந்து வேறொரு புதிய இடத்துக்கு அல்லது உலகுக்கு கடந்து போய்விடும் என்ற உண்மையை மனிதனுக்கு விளக்க பழத்தை இறைவன் கீழே விழவைத்தார்.
.
(அதுபோல் பூமியில் தோன்றும் மனிதனும் இங்கு நிலையாக இருக்க முடியாது. மரணம் என்ற ஒரு காலம் வரும் அதன் பிறகு சொர்க்கம் நரகம் என்ற புதிய இடங்களுக்கு கடந்து போகவேண்டும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்)

காரணம்- 4
.
குறைந்த தேவை உள்ள இடத்தை விட்டு அதிக தேவையுள்ள இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல மனிதன் வாகனங்கள் மற்றும் போக்கு வரத்து சாதனங்களை பயன் படுத்துகிறான்.
ஆப்பிள் பழத்தில் உள்ள சதை பகுதியானது மனிதன் மற்றும் மிருகங்களுக்கு உணவாக பயன்படுவதால் இறைவன் ஆப்பிள் பழத்துக்கு அதிக தேவையுள்ள இடமாகிய பூமிக்கு போகும்படி இலவசமாக போக்குவரத்து விசையை ஏற்படுத்தி கொடுத்தார்.
.
வேறு எதாவது காரணம் இருந்தால் தெரிவியுங்கள்.


> இப்போது ஒரு பழைய கேள்வி. இறைவனைப் படைத்தது யார்?
> இல்லை வேறு ஒரு கேள்வி. ஏன் படைத்தார்? நண்பர்களே!
எனது தாத்தாவுக்கு தாத்தாவை பெற்றது யார் என்றே எனக்கு தெரியாது அப்படி இருக்கும் போது எந்தனயோ கோடி ஆண்டுகளாக இருக்கும் கடவுளை படைத்தது யார் என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது?
எனினும் பதில் இல்லாத கேள்வி என்று ஒன்றும் இல்லை.
உருவங்களை தான் படைக்க வேண்டும் இறைவன் உருவமற்றவர் அவரை யாரும் படைக்கவில்லை அவர் தானாக உருவானவர்.
அது எப்படி முடியும் என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி வரலாம்
சில துளி திரவத்தில் இருந்து தான் இவ்வளவு பெரிய மனிதனாக நாம் உருவானோம் என்பதும் ஒரு சிறு விதையில் இருந்து தான் இவ்வளவு பெரிய மரம் வந்தது என்பதும் எப்படி நம்ப முடியாத உண்மையாக இருக்கிறதோ அதை போல
ஒரு அணுவில் இருந்து இறைவன் உருவானார் அந்த அணுவை படைத்தது யார் என்றால் அவர்தான் இறைவன்.

இறைவன் இல்லை என்றும் மனிதன் தான் கடவுள் என்றும் பலவாறு கேள்விகள் கேட்கும் அன்பர்களே!
இறைவன் யாருக்கும் தன்னை மறைக்கவும் விரும்பவில்லை யாரும் தன்னை வீணாக வணங்க வேண்டும் என்றும் தான் ஒரு முதலாளிபோல இருக்க வேண்டும் என்று விரும்பவும் இல்லை.
மனிதன்தான் அவரை விட்டு பிரிந்து பின்னால் ஓடுகிறான். ஏனெனில் அவர் வைத்திருக்கும் மனசாட்சிக்கும், அவர் உலகில் நியமித்திருக்கும் நீதி நியயங்களுக்கும், உலகின் சட்ட திட்டங்களுக்கும் ஒரு இடத்தில் கீழ்படியாமல் நடக்கும் போதும் அவரை விட்டு ஒரு மயில் தூரம் பின்னால் போகிறோம்.
சரி இன்றே இறைவன் வந்து நான் தான் இறைவன் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள், உடனே அவர் சொல்வதை எல்லாம் கேட்டு அதற்கு முழுமையாக கீழ்படிந்து பொய், திருட்டு, வஞ்சம், பொறாமை,எரிச்சல், இச்சை, பண ஆசை, எல்லற்றவ்ற்றையும் விட்டுவிட்டு அவரின் சொல்லுக்கு முழுமையாக கீழ்படிந்து வழமுடியுமா?
நீங்கள் எந்த இறைவனையும் கும்பிட வேண்டிய தேவை இல்லை, எந்த கோவிலுக்கும் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் தேவைகளை விட பிறர் தேவையையும், உங்களை நேசிப்பதை விட பிறரை நேசிப்பதிலும், உங்களுக்காக செலவழிப்பதை விட பிறருக்கு செலவழிப்பதில் மகிழ்ச்சி உடையவராகவும், பிறருக்காக எதையும் இழக்க தயாராகும், ஒரு குழதையை போல கீழ்ப்படியும் தன்மை உடையவராகும் இருந்தால் நான் 100% அடித்து சொல்கிறேன் நீங்கள் எங்கு இருந்தாலும் இறைவன் உங்களை தேடி வருவார்.
நான் இறைவனை தேடி எங்கும் போகவில்லை அவர் என்னை தேடி வந்தார். அவர் நடத்தும் விதம் நமக்கு பயித்தியமகத்தான் தெரியும் ஆனாலும் அதில் உள்ள உண்மை நமது சாதரண அறிவுக்கு எட்டாது. அவர் தனது அறிவில் கொஞ்சம் நமக்கு தரும் போதுதான் எல்லாமே நியாயம் என்று நமக்கு புரியம். நாம் நாளைய நிலையை பற்றி சித்திப்போம் இறைவன் 400 வருடங்களுக்கு அப்பால் உள்ளதை சிந்திப்பார். எனவே நீர் என் என்னை இதை செய்ய சொல்கிறீர் என்று நாம் அவரிடம் கேள்வி கேட்ககூடாது. நமது தகப்பன் நமக்கு நல்லதை தான் சொல்வார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் அது நமக்காக மட்டுமல்ல இந்த உலகில் எல்லோருக்கும் நன்மையாக முடியும்.
நீங்கள் அப்படி இருக்காதவரை அவர் தன்னை உங்களுக்கு தெரியப்படுத்தினால் உங்களுக்கோ அல்லது அவருக்கோ எந்த பயனும் இல்லை. சும்மா அன்பு அன்பு என்று சொல்லிக்கொண்டு நான் எனது இஸ்டப்படி வாழ்வேன் அவர் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று நினைப்பது எந்த தகுதியும் இல்லாமல் எனக்கு IAS பட்டம் வேண்டும் என்று கேட்பதற்கும் சமம்.
உண்மையான அன்பு என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா? "பிறருக்காக (அதாவது அவன் நமது எதிரியாக இருந்தாலும்) தனது ஜீவனை கொடுக்க தயாராக இருப்பது தான் உண்மையான அன்பு.
அப்படி ஒரு அன்பு இல்லாதவரை அன்பு என்று பேசுவதெல்லாம் வெறும் வீண் பேச்சு.
முதலில் உங்களை நீங்கள் தகுதிபடுத்துங்கள் இறைவன் உங்களை தேடி வருவார். நாம் இறைவனை தேடுவதைவிட 100 மடங்கு அதிகமாக அவர் மனிதனி தேடிக்கொண்டு இருக்கிறார்

SUNDAR

எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் அவரவர் மதக் கோட்பாடு படி முழுமையாக வாழத் தயாராக இருக்கிறார்கள்???
ஒரு வேளை அப்படி இருந்தார்களே ஆனாலும் இந்த உலகம் எப்படி இருக்கும், ஒரு மயான பூமியும். ஒரு மியூசியம் (தமிழில் என்ன?) போலவும் தான் இருக்கும்.
பூமியில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ஒருவன் வாழ்வதே சாலச் சிறந்தது. எனக்கு அது போதும். நான் முழுமையாக வாழ வந்தவன், வாழ்வை கோட்பாடுகளுக்கு அடகுவைத்து விட்டு இறந்த பின்னர் கிடைக்கப் போகும் பலனுக்காக எனது வாழ்வைத் தொலைக்க நான் தயார் இல்லை.
இறந்த பின்னரும்... என்ற ஒரு மூர்க்கமான வார்த்தையினால் இங்கே இராமனும், இயேசுவும், புத்தனும் தோன்றியிருக்கிறார்கள், மேலும் அக்கலீஸ், நெப்போலியன், அசோகா, இன்னும் எத்தனையோ ஆயிரம் சரித்திரத்தில் இடம் பிடித்த கொலை காரர்களும் தோன்றியிருக்கிறார்கள்.
புத்தனைப் போல் அன்பு மட்டுமே பரப்பியவர்களும், அவர்கள் சென்ற பிறகு அந்த அன்பென்ற மதத்தைக் கொலைவெறியுடன் பரப்பிக் கொண்டிருக்கும் மத அடிவருடிகள் இருப்பதுதான் உண்மை.
ஏதோ ஒற்றை வரியில் சாந்தி அக்கா புரிதலில் தவறு, மதகுருமார்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிறார்கள். இதோ கேட்கிறேன், மத குருமார்களை வைத்து எடை போடக்கூடாது என்றால் வேறு எவரை வைத்து எடை போடுவது???? பைபிளையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியவர்கள்தான் மதகுருமார்கள், நீங்கள் கையில் வைத்திருக்கும் பைபிள் இயேசுபிரானால் சொல்லப் பட்டதை அப்படியே எழுதியதா???

பாஸ்கர் (Baskar) அங்கப்பன்

அன்பர் பாஸ்கர் அவர்களே!
நீங்கள் சொல்வது போல் எனது வாழ்க்கை துறவி போல இல்லை, நானும் எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் ஆனால் அவற்றால் பிறருக்கு தீமை இல்லாதபடி பார்த்து அனுபவிக்கிறேன் அவ்வளவுதான்.
இறைவனி அறிந்த நாளில் இருந்து எனது உடம்பில் இன்ஜெச்டின் என்று போட்டு 14 வருடம் ஆகிறது. ஜலதோஷம் தான் எனக்கு வந்த மிகப்பெரிய வியாதி. எனது குடும்பத்தில் மொத்தம் 5 பேர் மருத்துவ மனைக்கு நான் ஒரே நேரத்தில் அதிக பட்சம் செலவழித்தது 2000/- மட்டுமே அதுவும் எனது மகன் பிரப்புக்காக. நான் வேலை தேடி எங்கும் அலைவதே கிடையாது தானாக கூப்பிட்டு சம்பள உயர்வுடன் வேலை தருவார்கள். எல்லாவற்றையும் விட இந்த வானமே இடிந்து விழுந்தாலும் அது என்னை ஒன்றுமே செய்ய முடியாது இறைவன் என்பக்கம் இருக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உண்டு எனவே என் குழந்தைகளுக்கு தடுப்பூசி கூட நான் போடுவது கிடையாது. இப்படி இறைவன் என்னை காக்கும் விதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்
இறைவன் உங்களை ஒரே அச்சில் வார்த்த பொம்மை போலெல்லாம் இருக்க சொல்லவில்லை உங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நீதி நியாயங்களுக்கு கீழ்படிந்து பிற மனிதனை தன்னை போல் நேசித்துதான் வாழ சொல்கிறார். உங்களை போல நானும் 10 மாதம் தான் அது போல் புத்தர், மாவீரர் எல்லோரும் நம்மைபோல் மனிதர்கள் தான். என்னால் செய்ய முடிந்தது உங்களால் என் செய்ய முடியாது ஏன். இதே கேள்வியை நாளை இறைவன் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
முயற்சி வேண்டும் இரண்டாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் வேண்டும் அவ்வளவுதான்
இறைவன் தேவை உள்ள எல்லாமே மனிதனுக்கு அனுபவிக்க அனுமதி கொடுத்துள்ளார் ஆனால் அதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதை மீறி நாம் அனுமதிக்கும் போது அது பாவமாகிவிடுகிறது அவ்வளவுதான்
மற்றபடி இறைவன் நமது சுகத்திலும் இன்பத்திலும் மிகவும் கரிசனை உள்ளவர்.
இறைவனை பற்றி அறியாமல் அதைப்பற்றி அப்படி இப்படி என்று பேசுவதை விட உணர்ந்து அறிந்து அதன்பின் பேசுங்கள். இறைவனை முழுமையாக அறியாமல் அவரை பழிக்காதீர்கள்.
SUNDAR

உங்களை விட என்ன விதத்தில் குறைவாக வாழுகிறோம் என்று எண்ணுகிறீர்கள், இறைவன் வந்து என்னிடம் ஏன் சுந்தர் போல் உன்னால் இருக்க முடியவில்லை என்று கேட்க ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன், அது அவரை நம்புவது பற்றி இருக்கும்.
எனது வாழ்வில் நான் யாருக்கு துரோகம் செய்ததில்லை, எனது பொய்யால் சிலரை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறேனே தவிர துன்பப் படுத்தியதில்லை. யாரிடமும் பணம் வாங்கி பின் அவரை ஏமாற்றியதில்லை. உயிர்களைக் கொல்வது தவறென்று மாமிசமே உண்பதில்லை (என்னைக் கடிக்கின்ற கொசுவை அடிப்பதுண்டு!), எனது பக்கத்து வீட்டில் நுழைய எண்ணிய பாம்பை அடித்துக் கொண்றிருக்கிறேன் (இறைவன் அவர்களைக் காப்பாற்றுவார் என்று என்னால் நிம்மதியா இருக்க முடியாததாலும், அங்கே இருக்கின்ற இரண்டு சின்னக் குழந்தைகளை எண்ணியும் அதைக் கொன்றேன், அதற்காகவும் சிறிது வருத்தப் பட்டிருக்கிறேன்). என்னைச் சுற்றி உள்ளோருக்கு நல்லவைகளை என்னால் முடிந்தவரை செய்கிறேன். ஒரு அன்பு இல்லத்துக்கு மாதா மாதம் எனது நண்பர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து என்னால் முடிந்தவரை அவர்களுக்குக் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் ஒரு அன்பு இல்லம் நடத்தவும் திட்டம் இருக்கிறது. எனது அப்பா அம்மா பேச்சை இதுவரை தட்டியதில்லை (எனது திருமணத்தை இரண்டு வருடம் தள்ளிப் போடும்படி சொன்னதைத் தவிர)
என்ன ஒன்று வட்டி கிடைத்து விடுமோ என்று பயந்து பெரிய அலுவலகத்தில் சேராமல் இருப்பதில்லை (இது தவறாக எனக்கு சுத்தமாகப் படவில்லை). எனக்குத் தெரிந்த பக்கத்து வீட்டுக் குழந்தைகளை அழைத்துச் சென்று போய் தடுப்பூசி போட்டு விடுவேன்.
எதைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை, யாருக்கும் நான் அடிமையும் இல்லை.
என் அறிவுக்கு மட்டுமே கட்டுப் படுபவன் நான். என் போன்று எனது நண்பர்களில் பலரும் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த விதத்திலும் கடவுள் தேவைப் பட்டதும் இல்லை.
எப்பொழுதுமே, இல்லை என்பதிலிருந்து இருக்கிறது என்பதை நோக்கி பயனப்படுபவன் நான். என் அனுபவத்தில் கடவுள் இல்லை, நான் வேறு யார் அனுபவத்தையும் அதில் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை (ஏனென்றால் இதில் யார் கூறுவது உண்மை என்பது தெரியாது). ஒரு வேளை உங்கள் கூற்று போல் இறைவன் ஒருவர் இருந்து அவரை நான் உணர நேர்ந்தால் அப்பொழுதும், இது வரை இப்பட்டி இருந்துவிட்டோமே என்று வருத்தப்படவோ, வெட்கப் படவோ மாட்டேன்.
square(a+b) = square(a) + square(b) + 2ab இதைத் தெரிந்து கொள்ள எனக்கு சுமார் 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுபோல் இதற்கும் இத்தனை வருடங்கள் தேவைப் பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்ளுவேன். ஒருவேளை இறைவன் என்பவரே இல்லை என்றால், இது வரை நான் நடந்து கொண்டதையெண்ணி சந்தோசப் பட்டுக் கொள்ளுவேன்.
ஆனால் பரம்பரை பரம்பரையாக இறைவனை தொழுவதால் அவர்களது குழந்தையும் அதே இறைவனை வழிபடுகிறது. இது கண் மூடித் தனமாகக் கருதுகிறேன். ஒரு வேளை கடவுள் இல்லையென்றால் அந்தப் பரம்பரைக்கே அது அவமானம், இத்தனை நாள் இல்லாத ஒன்றை நம்பியதற்கு. :-)
என்னைப் பொருத்தவரையில் கடவுள் இல்லை, இல்லை, இல்லை. உங்களைப் போல் என்னால் தடுப்பூசி கூட போடாமல் இருக்க முடியாது.
வெள்ளம் வரும்போது ஒருவன் ஒரு கூரையின் மேல் அமர்ந்து இருந்தானாம். அந்த வழியே வந்த ஒரு படகுக் காரர், இதில் ஏறிக் கொள்ளுங்கள் உங்களைக் கரை சேர்க்கிறேன் என்றானாம், இறைவன் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறினானாம். அந்த வழியே வந்த ஒரு கட்டைத் துண்டையும் பற்றாது இறைவன் என்னைக் காப்பாற்றுவார் என்றானாம். இறுதியில் இறந்து இறைவனைக் கண்டு என்னை ஏன் காப்பாற்றாமல் விட்டாய் என்றானாம், அவர் அதற்குச் சொன்னாராம் நான் உனக்காக ஒரு படகு அனுப்பினேன், ஒரு கட்டைத் துண்டு அனுப்பினேன், நீ எதையுமே பயன்படுத்தாது இப்பொழுது என்னைப் பழிக்கிறாயே என்றானாம்.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி கூட போடாமல் இருப்பது எனக்கு இந்தக் கதையைத்தான் நியாபகப் படுத்துகிறது.
இறைவனை நம்பினால் எதுவுமே வேண்டாம் என்றால் எதற்கு வேலை பார்க்கிறீர்? பசிக்கும், உணவு வேண்டும் என்பதால்தானே!
ஆறாவது அறிவை உங்கள் கடவுள் பிறகு எதற்காகத்தான் கொடுத்திருக்கிறார், இதற்கு பதிலாக ஒரு நட்சத்திர மீனாக இருந்திருக்கலாமே!
இறைவந்தான் மனிதனைப் படைத்தான், இறைவந்தான் எல்லாவற்றையும் கட்டுப் படுத்துகிறான் என்றால், ஏனைய்யா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவிட்டான் மனிதனை????!!!
எதற்கு விஞ்ஞானம், எதற்கு மருத்துவம்? - சாமி கும்பிட்டா போதாதா???
பாஸ்கர் (Baskar) அங்கப்பன்
அன்பு நண்பர் அவர்களே!
உங்களுடய சன்மார்க்க வாழ்க்கைக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்! இறைவன் இல்லை என்பவர்கள் எல்லாம் துன்மார்க்கர் அல்ல. ஆனாலும் மனிதனின் நெறிமுறைகள் வேறு இறைவனின் நெறி முறைகள் வேறு அதை அறியாமல் நிறையபேர் நான் நல்லவன் என்ற சொல்லிக்கொண்டு இருப்பதை உலகில் பார்க்க முடியும். இருட்டில் இருப்பவனுக்கு எதுவும் சரியாக தெரிவதில்லை இறை வெளிச்சத்தில் வந்தால் தான் முகத்தில் இருக்கும் கரி தெரியும்.
உங்களை பற்றியும் உங்கள் சன்மார்க்க வாழ்க்கை பற்றியும் இறைவனுக்கு முழுவதும் தெரியும். அதனால் தான் இறைவன் என்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.
நீங்கள் உங்களுக்கே ஒரு நல்ல கதை சொல்லியுள்ளீர்கள்.
ஒருவர் இறைவன் இல்லை என்று சொல்லிக்கொண்டு மிகவும் நல்லவனாக வாழ்ந்து வந்தார். அவர் நரகத்தின் வாசலில் நிற்பதை அறிந்த இறைவன் அவர்மேல் மிகவும் அனுதாபத்தோடு பல மனிதர்களை இறைவனை பற்றி சொல்லும்படி அனுப்பி வைத்தார் ஆனால் அவர் தனது கொள்கையில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்
கடைசியான நிலையில், இறைவனை நன்றாக உணர்ந்த, நரகத்தை நேரில் பார்த்த ஒரு மனிதனை அவருக்கு அறிமுகமாக்கினார் ஆனாலும் தன் பிடிவாதத்தால் அவர் எதையும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இதற்குமேல் அவருக்காக அழுவதை தவிர வேறு விழி இல்லை!
எதற்குமே ஒரு காலம் உண்டு நீங்கள் இறைவனை உணரும் நாட்களில் காலம் கடந்து விட்டால் அதன் பிறகு அழுது புரண்டும் எந்த பயனும் இல்லை
நான் உண்மையில் உங்களுக்க்காகும் உங்கள் அறியாமைக்க்காகவும் மிகவும் வருந்துகிறேன்!
உங்களுக்காக இறைவனிடம் விண்ணப்பிக்கிறேன்! வேறு என்ன செய்ய?
ஆறாவது அறிவு இறைவனை அறிவதர்க்காக தான் கொடுக்கப்பட்டது. மருந்து மாத்திரை கண்டுபிடித்து சாப்பிட அல்ல மிருகம் போல பிறந்தோம் வாழ்ந்தோம் இனப்பெருக்கம் செய்தோம் செத்தோம் என்று ஒழிந்தது போக அல்ல.
உங்கள் காலமும் உங்கள் சுவாசமும் உங்கள் கையில் இல்லமால் யாருடைய கையிலேயோ இருக்கிறது என்று கண்கூடாக தெரிந்தும், உலகில் பிறப்பவன் எல்லாம் மரித்து எங்கு போகிறான் என்று தெரியாத ஒரு இடத்துக்கு போகிறான் என்பது கண்முன்னால் தெரியும் உண்மையாக இருந்தும் அது என்ன என்று பகுத்தறிய மனதில்லாமல் தன் சுவாசத்தை உங்கள் கையில் வைத்திருப்பவரை இல்லை என்று சொல்பவர், பகுத்தறிவை பற்றி பேசுவது ஆச்சர்யம் தான்.
(அன்பால் திருந்தாத சில நல்லவர்களை இறைவன் அடித்து திருத்துவார்! எதற்கும் தயாராக இருங்கள்)
SUNDAR

பாஸ்கர் அவர்களே
உங்களை கடவுளை நம்பவைத்தால் எனக்கு எதோ ஆயிரம் பொன்காசுகள் பரிசு கிடைப்பது போல் இத்தனை 2 மார்க் கேள்விகளை கேட்டுள்ளீர்களே நியாயமா?
ஆயினும் எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்

On May 13, 3:07 pm, "பாஸ்கர் (Baskar) அங்கப்பன்"
wrote: > உங்களிடம் மேலும் சில கேள்விகள், பதில் சொல்லுவீர்கள் என நம்புகிறேன்.">mailme.bas...@gmail.com> wrote: > உங்களிடம் மேலும் சில கேள்விகள், பதில் சொல்லுவீர்கள் என நம்புகிறேன்.
1. கடவுள் எப்படி இருந்தார்?
கடவுள் இருக்கிரவராகவே இருந்தார் அவருக்கு முதலோ முடிவோ கிடையாது
> 2. கடவுளோட பொறுமையின் அளவு என்ன?
ஒரு தாய் தகப்பனின் பொறுமையின் அளவை விட 1000 மடங்கு அதிகம்
> 3. அவரால் செய்ய முடியாதது ஏதேனும் உண்டா?
ஒன்றுமே இல்லை
> 4. அப்படி (3) இருப்பின் அவரால் செய்ய முடியாத ஒன்றாக ஒரு விசயத்தை அவரால் > படைக்க முடியுமா?
பலர் சொல்வது போல் தூக்க முடியாத கல்லை படைத்துவிட்டு தூக்க முடியவில்லை என்பார் நாம் முடியவில்லை என்று சொன்னால் அந்த கல்லை விட பல மடங்கு பெரியவராகே அதை தூக்கி காட்டுவார்
> 5. எதற்காக அவர் படைத்த மனிதனை அவரை நம்பாதவராகவும் படைக்கிறார், > விளையாட்டுக்காவா?
மனிதனை ஒரு ரோபோட் போல படைக்காமல் சுய புத்தி உள்ளவனாக படைத்தார் அவர் கொடுத்த புத்தியை வைத்துக்கொண்டு அவரே இல்லை என்று மனிதன் சொல்கிறான். (ஏறிய ஏணியை உதைப்பது தானே மனிதன் பழக்கம்)
> 6. எதற்காகத்தான் மனிதனை படைத்தார்? ஆறாம் அறிவு அவரை அறியத்தான் என்று >
கூறுவதால் கேட்கிறேன்! இறை வரையறைக்குள் கட்டுப்பட்டு இன்பமுடன் வாழவே மேலும் உலகை கெடுத்து வரும் தீமையை உலகை விட்டு விரட்ட இறைவனுக்கு துணை நிற்க
> 7. கடவுள் என்பவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்?
அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல (மதம் என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டது
> 8. என்னை அடித்துத் திருத்துவார்னு சொன்னீங்களே அது இந்துக் கடவுளா (அப்படின்னா > அதுல யாரு?), இல்லை கர்த்தரா, இல்லை அல்லாவா, புத்தரா, மகாவீரரா, ஹிட்லரா, > முசோலினியா, சுந்தரா?
கடவுள் என்றால் இறைவன், தேவன், காரணகர்த்தா என்று பல பெயர்கள். அவருக்கென்று ஒரு பெயர் கிடையாது
> 9. ஒரு வேளை வேறு மதக் கடவுள் வந்து என்னை அடிக்க வந்து, எங்க அப்பா அம்மா > கும்பிடுற கடவுள் எனக்காக வந்து என்னைக் காப்பாற்ற முயல, கடவுளுக்குள் போர் > வருமா?
வேறு மத கடவுள் எல்லாம் அந்த சர்வ வல்ல இறைவனின் படைப்புகள் தான் அவைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது
> 10. என்னை நரகத்தில் தள்ளுவதால் அவருக்கு என்ன பயன்?
உங்களை நரகத்தில் தாளுவது அவர் விருப்பம் அல்ல. தீமை என்ற ஒரு எதிர் சக்தி ஆதியில் இருந்தே உள்ளது நீங்கள் அதன் பக்கம் இருந்தால் அது உங்களை ஆட்டமட்டிக்கக் அவனோடு சேர்ந்து நரகம் போக வேண்டியது தான். அதை தடுக்கதான் இறைவன் இந்த படாத பாடுபடுகிறார்.
> 11. நான் கடவுள் இருக்கிறான் என்று கூறுவதால் அவருக்கு என்ன பயன்? அவருக்கு என்ன பயனும் இல்லை, நீங்களும் நரகம் போகாமல் தப்பிக்க முடியும் உங்களை போல பலரை தப்புவிக்க முடியும். யாரும் நரகம் போககூடாது என்பது தான் இறைவனின் விருப்பம்
> 12. ஒரு வேளை எல்லாக் கடவுளுமே ஒன்றுதான் என்றால், ஏன் எந்த மதத்திலும், > இன்னும் இத்தனை மதங்கள் இருக்கிறது, அவர்களும் என்னுடைய இன்னொரு பிரதியையே > வணங்குகிறார்கள் என்று கூறவில்லை?
மீண்டும் அதே பதில் - எல்லா மதத்தின் கடவுள்களும் சர்வ வல்ல இறைவனின் படைப்புகளே
> 13. இல்லை கடவுள் என்பவர் கர்த்தர் மட்டுமேயானால் மற்ற மதத்தினர் அடிமுட்டாளா? > அவர்கல் தெய்வங்கள் வெறும் கட்டுக் கதைதானா?
கடவுள் என்ற தமிழ் வார்த்தை தான் கர்த்தர் (Lord) என சொல்லப்பட்டுள்ளது, கர்த்தர் என்பவர் தனி கடவுள் அல்ல
> 14. சாத்தான் என்பதை கடவுள் ஏன் உறுவாக்கினார்?
சாத்தான் என்பவன் இறைவனால் படைக்கப்படும் போது பரிசுத்தமாகவே படைக்கப்பட்டான் அனால் அவனும் ஆதியில் இருந்து வந்த தீமையால் பாதிக்கப்பட்டு தீமையுடன் சேர்ந்து சாத்தானாக மாறிவிட்டான்.
> 15. ஏன் ஆப்பிளை சாப்பிடக்கூடாது எனக் கூறி ஆப்பிளையும் அங்கு வைத்தார்?
ஆப்பிளை சாப்பிடாமல் மட்டும் மனிதன் ஜெயித்திருந்தால் ஆதியில் இருந்து வந்த தீமையை அன்றோடு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். அதை ஜெயிக்க வேண்டும் என்பதற்க்க்காகவே அங்கு ஆதம் ஏவாளை வைத்தார் ஆனால் தோற்று போய் விட்டனர். அதனால் மனிதர்கள் இன்றும் தீமைக்கு அடிமையாய் வாழ்கின்றனர்
SUNDAR


Wednesday, May 7, 2008

ஒரு துளி விஷம் ஒரு டம்ளர் பாலை கெடுக்கும்!

ராஜாவின் விருந்து ஒன்றுக்காக ஒரு கூடை நிறைய பழங்கள் வாங்கி ராஜாவின் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது.

.

பழகூடையை திறந்து ராஜா பார்வையிட்டபோது பல பழங்கள் அழுகி இருப்பதை அறிந்து, தனது வேலைக்காரரை அழைத்து நல்ல பழங்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துவிட்டு, அழுகிய பழங்களை எடுத்து அது அரண்மனையை கெடுத்து விடாதபடிக்கு ஆழ குழி தோண்டி புதைக்க கட்டளை இட்டார்.

.

அதை அறிந்த அழுகல்பழம் வாங்கும் ஒருவர் ராஜாவிடம் கிரயம் கொடுத்து அழுகல் பழங்கள் எல்லாம் தனக்கு தரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். ராஜாவும் அதற்கு சம்மதித்தார்.
.

வேலைக்காரன் பழத்தை பிரிக்கும் போது அனேக பழங்கள் அழுகல்பழம் வாங்குபவரிடம் போக விரும்பாமல், எப்படியாவது ராஜாவின் வீட்டு விருந்துக்கு போக ஆசைபட்டு தன் சின்ன சின்ன அழுகல்களை எல்லாம் உள்ளே மறைத்து கொண்டன. பல சொத்தை பழங்கள் தனது சொத்தை தன்மையை மறைத்துக்கொண்டு நல்ல பழம்போல காட்சி கொடுத்தன இன்னும் சில பழங்கள் உள்ளே முழுவதும் அழுகி இருந்தும் தோலை மட்டும் நல்லதுபோல் காட்டி தப்பித்துக் கொண்டன.

.

அழுகல் பழங்களை வாங்கியவர் அவைகளை எல்லாம் நன்றாக கழுவி சுத்திகரித்து அனேகருக்கு பயன் உள்ள பழரசமாக மாற்றினார். ஆனாலும் அவர் வாங்கியதில் பல அழுகல் பழங்கள் தன்னை சுத்திகரிக்க அவர் கையில் ஒப்புகொடுக்க வில்லை. எனவே அவைகள் ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டன.

.

நல்ல பழங்களை பார்வையிட்ட ராஜா அத்துடன் இன்னும் பல சொத்தை பழங்கள் கலந்திருப்பதை உடனே கண்டுகொண்டார். அவற்றை எல்லாம் அப்புறப்படுத்த ஆரம்பித்தார் சின்ன சின்ன சொத்தையில் இருந்து லேசாக அழுகிய பழம் எல்லாமே பிரிக்கப்பட்டு (அழுகல் பழ வியாபாரி போய் விட்டாதால்) ஆழகுழி தோண்டி புதைக்கப்பட்டது.
.

இங்கு ராஜா இறைவனாகவும் அழுகல் பழம் வாங்குபவர் "நீதிமானை அல்ல பாவிகளையே இரட்சிக்க பூமிக்கு வந்தேன் என்று சொன்ன இயேசுவாகவும் ஆழ குழி என்பது நரகமாகவும், பயன்பட்டவர்கள் எல்லாம் சொர்க்கம் சென்றவர்களாகவும் எடுத்துக்கொள்க!
.

நீங்கள் பொய், திருட்டு, வஞ்சம், பொறாமை, பெருமை, பண ஆசை, லஞ்சம், ஏமாற்று போன்ற எந்த கெட்ட குணமும் சிறிது கூட இல்லாத பரிசுத்தவானாக இருந்தால் மட்டும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள் ஒரு துளி விஷம் கூட ஒரு டம்ளர் பாலை குடிக்க தகுதி அற்றதாக மாற்றிவிடும்

இறைவன் மிக மிக பரிசுத்தர். பரிசுத்தம் இல்லாத எவனும் அவரை நெருங்கவே முடியாது.

.
இல்லை அது முடியவில்லை என்றால் பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவிடம் இன்றே ஓடி வாருங்கள் அவர் உங்களை சுத்தப்படுத்தி தகுதிப்படுத்துவார்.

.

இரண்டும் இல்லாமல் சிறு சிறு குற்றம் தான் என்னிடம் உள்ளது அதை மன்னித்து இறைவன் என்னை ஏற்றுக்கொள்வார், எங்களுக்கென ஒரு தனி வழி வைத்திருப்பார் என்றெல்லாம் நினைத்து இரண்டும் இல்லாத நிலையில் வாழ்வீர்கள் என்றால் அதன் முடிவு துக்கமே!

சில கேள்விகள்,

வேண்டுமேன்றே அந்தப்பழங்கள் அழுகினவா? அல்லது பக்குவப்படுத்த ஆள் > இல்லாமையினாலா? > 2. தோட்டக்காரன் அழுகல்பழங்களை தன் சுயநலத்திற்காக நல்லபழங்களுடன் கலந்து > விட்டானா?

பழங்கள் மரத்தில் பழுக்கும் போது நன்றாகத்தான் இருந்தன தோட்டக்காரன் கூடையில் அடுக்கும் போதும் நன்றாகத்தான் இருந்தன ஆனால் அவை இருந்த சூழ்நிலை காரணமாக மற்றும் தீமை என்னும் கிருமிகள் காரணமாக அழுகல் மற்றும் சொத்தையாக போய்விட்டன

> 4.மண்ணில் புதையுண்ட அந்தப்பழங்களின் விதைகள் நல்லபழங்களைத் தராதா? மண்ணிக்கு > உரம் ஏற்றாதா?

மண்ணில் புதையுண்ட விதைகள் மீண்டும் மரமாகி அதேபோல் கெட்ட கனிகளை தந்துவிடக்கூடாது என்று தான் ஆழகுழி தோண்டி புதைக்கப்பட்டன என்று எழுதினேன்
> 5.பழவியாபரியை படைத்ததுபோல் அழுகல் நோய்தீர்க்கும் மருந்தை பூமியில் மாரியாய் > கொட்டிருந்தால் பத்தாதா? (இன்றைய தேதிக்கு நமக்கு இறைத்தூதர்களைவிட > மனிதநேயத்தைப் பரப்பும் மகான்கள் தானே அவசியம்)

அழுகல் நோய் தீர்க்கும் மருந்து பூமியில் இலவசமாக கொட்டி கிடக்கிறது அன்பரே (இயேசுவின் இரத்தமாக) அதை எடுத்து உண்டால் தானே அழுகல் நோய் போகும். நாம் என்ன ஒரு மிருகமா பிடித்து மருந்தை வாயில் வூட்டி விட!
முக்கியமாக தீமையை படைத்தது இறைவன் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் அட்டுபவர் அல்ல. நாளை நீங்கள் இறைவன் முன் நின்று கேட்கும் எந்த கேள்விக்கும் நியாயமான பதில் அவரிடம் உண்டு. SUNDAR














Tuesday, May 6, 2008

சுகபோக வாழ்க்கையின் முடிவு!

அன்பானவர்களே!

ஒரு நாள் நான் என் நண்பர் ஒருவரிடம் இறைவனை பற்றி உயர்த்தி பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர் என்ன சார் கடவுள் கடவுள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் நல்ல பணம் புகழோடு 90 வயது வரை வாழ்கின்றனர். நீங்கள் கடவுள் கடவுள் என்று பேசி என்ன கண்டீர்கள்? பிறருக்கு அடிமையாக தானே இன்னும் வேலை பார்த்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். என்று சலிப்போடு சொன்னார்.
.
இதை போல இறைவனை தேடும் பலருக்கு சலிப்பும், இறைவனை தேடுவதால் எந்த பயனும் இல்லையோ என்ற எண்ணமும் வரக்கூடும். ஏனெனில் இந்த உலகில் எல்லாமே அப்படிதான் நடக்கிறது. இறைவனை நம்பாதவர்கள், ஏமாற்றுபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் எல்லாம் மிக சுகபோகமாக வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் இறைவனை தேடுபவருக்கு அதில் கொஞ்சமும் கிடைப்பது இல்லை அனேக நேரங்களில் இருப்பதும் கையைவிட்டு பிடுங்கப்பட்டு போய்விடுகிறது இது ஏன்? என்ற கேள்வி எழலாம்.
.
இதற்கான பதிலை ஒரு சின்ன கதை மூலம் விளக்குகிறேன், முன்னமே இந்த கதையை தெரிந்தவர்கள் ஒருமுறை ஞாபகபடுத்திகொள்ளவும்.
.
ஒரு குடியானவன் ஒரு கழுத்தையும் ஆடும் வளர்த்தானாம். ஒவ்வொரு நாளும் கழுதைக்கு சுமையை ஏற்றி, காலையில் இருந்து மாலை வரை அதற்கு எப்பொழுதும் கடின வேலைதானாம். சரியான உணவு இல்லாமால் கொஞ்சம் தளர்ந்தாலும் உடனே அடி உதை என்று ரொம்ப பாடு பட்டதாம் அந்த கழுதை. .
.
ஆனால் இந்த ஆடு ஒரு நாளும் அடிபட்டதே கிடையாதாம், நேரத்துக்கு சரியான உணவு மற்றும் எல்லா வசதியும் உடனுக்குடன் கிடைத்ததாம் அதுவும் நன்றாக தின்று கொழுத்துபோய் இருந்ததாம். அந்த கழுதைக்கு ஆட்டை பார்க்கும் போதெல்லாம் ஒரே பொறாமை. நானும் இந்த பூமியில் பிறந்துள்ளேனே! பிறந்தால் இந்த ஆட்டை போலல்லவா இருக்க வேண்டும்! என்று நினைத்து ஒவ்வொரு நாளும் மிகவும் வேதனை படுமாம்
.
ஒரு நாள் அந்த குடியானவன் ஒரு பெரிய கத்தியை எடுத்து தீட்டினானாம் கழுதை மிகவும் பயந்து நடுங்க ஆரம்பித்தது இன்றோடு நாம் தொலைந்தோம் அடி உதை போதாது என்று கத்தி வெட்டு வேறு கிடைக்க போகிறது என்று நடுங்கியதாம். ஆனால் ஆடு எதை பற்றியும் கவலை இல்லாமல் தின்றுகொண்டே இருந்ததாம்.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
அதுபோன்றதொரு முடிவுதான் இறைவனை அறியாமல் சுகபோகமாக வாழும் மக்களுக்கும்! அவர்கள் இறைவனை அறிய விரும்பவில்லை. அற்ப வருடம் வாழப்போகும் இந்த பூமியின் இன்பங்கள் மேலேயே அவர்கள் கண்கள் உள்ளது. இறைவன் எத்தனை எச்சரிப்பை கொடுத்தாலும் அவர்கள் கேட்பது இல்லை ஏனெனில் உலக சுகபோகம் அவர்கள் கண்களை மறைக்கிறது.
"அவர்கள் பூமியில் சம்பிரதாயமாய் வாழ்ந்து, ஷனப்போழுதில் பாதாளத்தில் இறங்குகிறார்கள்" என்று பைபிள் சொல்கிறது
.
உலகத்தில் சுகபோகமாக வாழ்ந்து மரித்த ஐஸ்வர்யாவான், லாசரு பற்றி ஏசு சொல்லும் போது அவன் சுகபோகமாக வாழ்ந்த ஒரே காரணத்துக்காக நரகம் கொண்டு போகப்பட்டான். ஏனெனில் அவன் இறைவனை பற்றி அறிந்துகொள்ளவே விரும்பவில்லை.
.
பணக்கார நண்பன் ஒருவனிடம் இறைவனை தெரிந்துகொள் என்றால் "நான் ஏன் அவரை தெரிந்துகொள்ள வேண்டும் எனக்கு எந்த குறையும் இல்லை, அவரை தெரிந்து கொள்வதால் எனக்கு என்ன லாபம்?" என்று கேட்கிறான்.
.
நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள், மரித்தபின் உங்கள் ஆத்துமா எங்கே போகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியாது, அது இறைவனின் கையில் இருக்கும்போது அவரை பற்றி அறியவிரும்பாமல் வாழ்வது எவ்வளவு மதியீனம்!

எனவே உலகில் உள்ள எல்லா காரியங்களை விட இறைவனுக்கு முதலிடம் கொடுகள். அது ஒன்றே இந்த உலகிலும், மரணத்துக்கு பின்னும் கூட உங்களை காக்கும்.
.
நல்ல கருத்து.. கதையும்... நல்ல விஷயத்தை அன்போடு சொல்கீறீர்கள்..
நன்றி சுந்தர் அவர்களே.. தொடருங்கள்....
-- சாந்தி. த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
.
காமேஷ்
சோம்பேறிகளும், சிந்திக்கத் தெரியாதவர்களும், தான் இறைவன் என்ற இல்லாத ஒன்றை தேடி, ஓடி நேரத்தை வீணாக்குவதாக எண்ணுகிறேன்.


நண்பர் காமேஷ் அவர்களே!

சுறு சுறுப்பான சிந்திக்க தெரிந்த நீங்கள், உங்கள் சுவாசத்தை ஒரு 10 நிமிடம் நிறுத்தி வையுங்களேன் பார்ப்போம் அல்லது உண்ணும் உணவை ஒரு நாள் முழுவதும் செரிக்கமால் இருக்க வைக்க முடியுமா?
நீங்கள் விருபினாலும் விரும்பாவிட்டாலும் இவை எல்லாம் தானாக நடக்கிறது. உங்களையே உங்களால் கட்டுப்படுத்த முடியாத போது நம்மை எதோ ஒரு சக்தி தன் கையில் வைத்துள்ளது என்று ஏன் உங்களால் நம்ப முடியவில்லை
தான் எந்த தாய் வயிற்றில் பிறந்தோம் என்பதையே இன்னொருவர் சொல்லித்தான் அறிந்து கொள்ளும் அற்ப பிறப்பாகிய மனிதன், கடவுளே இல்லை என்றும் தன்னையே கடவுள் என்று பீற்றிகொள்வதுதான் என்னால் தாங்க முடியவில்லை.
... SUNDAR

.

ஓஹோ அப்ப கடவுளை கும்பிட்டா இதெல்லாம் செய்ய முடியுமா ?
கடவுளை கும்மிட்டா.. 2 கை அதிகமா வரப்போகுதா ? இல்லை காலோ, கண்ணோ இல்லாதவர்களுக்கு மறுபடியும் கிடைக்கப் போகுதா ? இல்ல ஜிம்பாபேயில் ராபர்ட் முகாபே பதிவி விட்டு இறங்கிடப் போறாரா ? இல்ல நான் தான் முதலமைச்சரா ஆக முடியுமா ?
கடவுளை இருக்கார்னு சொன்னங்க கிடைக்கும் ?
சொர்க்கம் கிடைக்கும்னு சொல்லி எங்க வாயை மூடிடாதீங்க..
ஏதாவது நல்லதா சொல்லுங்க
.

...காமேஷ்

.

காமேஷ் அவர்களே!
பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து ஒவ்வொருவரும் நமது அப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று போதிக்கும் போது
மதிப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
என்று அறியாமல் கேட்கும் ஒரு சிறு குழந்தை கேள்விபோல் இருக்கிறது உங்கள் கேள்வி.
நீங்கள் என்னென்ன முடியுமா என்று கேட்கிறீர்களோ அதேலாமே இறைவனால் செய்ய முடியும். முடியாதது என்று அவருக்கு ஒன்றும் இல்லை.
இன்று இளமை நாளை முதுமை இது எல்லோருக்கும் தெரிந்தது தான்!
ஆனால் அந்த முதுமையோ அல்லது ஒரு விபத்தோ நடந்து தான் சுயமாக ஒன்றும் செய்ய முடியாமல் ஒவ்வொன்றுக்கும் பிறரை சார்ந்து நிற்கும் போதும், அவர்கள் நம்மை துச்சமாக மதித்து இவன் ஏன் இருக்கிறான் என்று ஒதுக்கும் போதும் தான் தெரியும் அதன் உண்மை வேதனை.
தனக்கு வந்தால் தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பார்கள் அதுபோல் நன்றாக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
மனிதர்கள் எல்லோரும் ஒரு நாளில் இவனால் எந்த பயனும் இல்லை இவனுக்கு எதுவுமே செய்ய முடியாது என்று கை விட்டுவிடலாம் ஆனால் நம்மை எந்த சூழ்நிலையிலும் கை விடாதவர் இறைவன் ஒருவரே. அவர் எந்த விதத்தில் நமக்கு பாதுகாப்பு தருவார் என்பதை அனுபவத்தில் தான் புரிய முடியும்.
அறியாத குழந்தைகளுக்கு ஓரளவுக்கு தான் விளக்க முடியும்

....SUNDAR

.

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியென்று நிச்சயம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் செலுத்தும் நன்றியை புரிந்துகொள்ளவோ நம் வேண்டுதலைக் கேட்டுக்கொள்ளும் சக்தியோ அச்சக்திக்கு இல்லை.
-- பச்ச‌ புள்ள விஜய டீ.ஆர். இரசிகர் மன்றம்‌;

.

அதாவது அந்த சக்திக்கு கண் காது இல்லை என்று சொல்கிறீர்களா?
இங்கிருக்கும் நீங்கள் ஜார்ஜ் புஷோடு உடனே பேசிவிட முடியுமா அல்லது நீங்கள் பேசினால் அவருக்குத்தான் கேட்குமா. அதற்க்க்காகக அவருக்கு என்னை புரிந்துகொள்ளும் அறிவு இல்லை என்று கூறுவது சரியா?
ஒரு மனிதனிடமே உடனே பேசமுடியாது பிறகு இறைவனை பற்றி அறியாமல் அப்படி சொல்வது முறையல்ல

...SUNDAR

.

சூழல் / இயற்கைன்னு சொல்ல வரேன்.
அந்த இயற்கையை கட்டுப்படுத்துபவந்தான் இறைவன்/ இயற்கைதான் இறைவன் என‌ எல்லா மதவாதிகளின் வழக்கம் போல மறுபடியும் வாதிட வந்தால் எனக்கு வழக்கம் போல பதில் சொல்ல வராது. :)
கண்டுபிடிக்கப்படாதவைகளுக்கு கடவுள் என பெயர் சூட்டி நிறைவடைகிறீர்கள் நீங்கள். நிறைவடையாதவைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் நாங்கள். நிறைவடையாதவை நிறைந்தால் கடவுள் மறைவார்.
-- பச்ச‌ புள்ள விஜய டீ.ஆர். இரசிகர் மன்றம்‌;

.

பச்ச புள்ள அவர்களே!
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்திருப்பது மகிழ்ச்சியே!
ஆனால் அது இயற்கை என்ற கூற்று சரியல்ல ஏனெனில் இயற்கையை படைத்தவர் இறைவன் தான்.
உதாரணமாக நான் ஒரு செல்போன் கொண்டுவந்து உங்களிடம் காட்டுகிறேன், அதை பார்த்த நீங்கள் "இது மிகவும் நன்றாக இருக்கிறது நானும் அதுபோல் ஒன்று வாங்க வேண்டும் இது எங்கே கிடைக்கிறது என்று கேட்கும் போது
நான் இது எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை
எனது அலுவலகம் பக்கத்தில் ஒரு ஏலக்ட்ரோனிக் கம்பனி இருந்தது அது ஒரு நாள் திடீர் என்று வெடித்துவிட்டது அது வெடித்த போது அங்கிருந்த பல பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இந்த மொபைல் உருவாகி ஏன் பக்கத்தில் வந்து விழுந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
அது போல் சூரியனில் இருந்து சரியான தொலைவு, நீள் வட்ட பாதயில் சூரியனை சுற்றுவது, மழை, காற்று, வாயு மண்டலம் என்று பார்த்து பார்த்து இறைவனால் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தை இயற்கையாய் வந்தது என்று சொன்னால் சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய!
மனித உடம்பை எடுத்துக்கொள்ளுங்கள் அது எத்தனை நேர்த்தியாக வடிவமக்கப்படுள்ளது, உங்கள் பல்லை பாருங்கள் எல்லா பல்லும் எல்லா விரலும் ஒன்றுபோல் இருந்தால் கூட நமது செயல்கள் பாதிக்கப்படும் அதற்கு தகுந்தால் போல் திட்டமிட்டு இறைவனால் வடிவமக்கப்படுள்ளது
எல்லாவற்றையும் பயன்படுத்தி சுகமாய் வாழ்ந்து கொண்டு, எல்லாம் தானாக இயற்கையாய் அமைந்தது என்று சொல்வது என்னய்யா நியாயம்?

...SUNDAR

Saturday, May 3, 2008

மதம் ஒரு வாகனமா? வழியா? அல்லது வழிகாட்டியா?

மீண்டும் மதம் என்ற வார்த்தயில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
.
மதம் என்பது நமக்கு எந்த விதத்தில் இறைவனை அடைய உதவுகிறது என்பதை இந்த தலைப்பில் பார்ப்போம்.
.
மதம் என்பது இறைவனிடம் நம்மை கொண்டுசெல்லும் ஒரு வாகனமா?
வாகனம் என்பது ஒருவரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சொல்ல பயன்படும் ஒரு கருவி. உதாரணமாக வேலூர் பேருந்தில் ஏறினால் அது நம்மை வேலூர் கொண்டுபோகும்.
.
ஆனால் மதம் என்பது அப்படி அல்ல. எந்த மதத்தின் உள்ளே நீங்கள் இருந்தாலும் அந்த மதம் உங்களை ஒருபோதும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது. மதங்கள் சொல்லும் வார்த்தைகளின் படி வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே நாம் இறைவனை சென்று அடையமுடியும். எல்லா மதங்களும் மனிதனுக்கு போதனையை தான் சொல்லுமே தவற அது நம்மை தூக்கி இறைவனிடம் கொண்டு சேர்க்காது.
.
மதம் என்பது இறைவனை அடையும் வழியா?
.
ஒரு வழியின் தன்மை என்னவென்றால் அந்த வழியில் நாம் சரியாக நடக்கும் போது அதுசரியான இலக்கில் கொண்டு சேர்க்கும் தன்மை உடையாது. உதாரணமாக திருச்சி போகும் சரியான வழியில் அடி பிசகாமல் செல்வோமென்றால் அது நம்மை திருச்சி கொண்டு சேர்த்துவிடும்.
.
ஆனால் இங்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்கிறது பிறகு எப்படி அது சரியான வழியை காட்ட முடியும்?
உதாரணமாக
இந்து மதம் உருவ வழிபாட்டை உடையது
ஆனால்
இஸ்லாமும், கிறிஸ்தவமும் சிலை வழிப்படி செய்பவர்கள் நரகம் செல்வார்கள் என்று கடுமையாக கண்டிக்கிறது.
.
கிறிஸ்தவம் இயேசுவே பாவத்தை மன்னிக்கும் பலி என்றும் அவர் தேவனின் குமாரன் என்றும் சொல்லி அவரை வழிபடுகிறது
.
ஆனால்
இஸ்லாம் அவர் இறைவன் அல்ல அவரை வழிபடுபவர்கள் நரகம்தான் போவார்கள் என்று முரணான கருத்தை தெரிவிக்கிறது.
.
இப்படி மாற்றி மாற்றி சொல்லும் போது மதம் எப்படி இறைவனை அடையும் வழியாக இருக்க முடியும்?
.
மதம் என்பது வழி காட்டியா?

ஆம் அன்பானவர்களே! இந்த வழியில் போனால் இறைவனை பார்க்க முடியும் என்று கையை காட்டும் ஒரு வழி காட்டியே மதங்கள் என்பது!
எந்த மதமானாலும் அதை தான் செய்கிறது. எந்த மதம் காட்டும் வழியில் நாம் பயணம் செய்தாலும் இறைவன் வந்து நமது கரங்களை பற்றினால் மட்டுமே அவரை சென்று அடைய முடியுமே தவிர நமது சுய முயற்ற்சியால் எவ்வளவு தான் தேடினாலும் அவரை கண்டடைய முடியாது.
.
அவர் வந்து நமது கரங்களை பிடிக்க வேண்டுமானால் அவர் மனதுக்கு ஏற்றபடி நேர்மையான, கள்ளம் கபடு அற்ற, பிறர்போற்றும் வாழ்க்கை வாழ வேண்டும் மற்றும் உலக காரியங்களை விட இறைவன் மேல் ஒரு தீராத வாஞ்சை வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர் நம்மை கரம் பிடிப்பார் .
.
அதை விட்டு விட்டு வழி காட்டியாகிய மதத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இது என்னுடையது அது உன்னுடயாது என்று சண்டை போடுவதில் எந்த பயனும் கிடையாது.