Friday, December 10, 2010

நாம் யாரை தொழுதுகொள்ள வேண்டும்?

இயேசுவுக்கு ஜனங்கள் தன்னை யாரென்று சொல்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் உண்டானது.

எனவே ஒருநாள்


மத்தேயு 16:13 இயேசு ...., தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

ஜனங்களுக்கு இயேசுவைப்பற்றி சரியாக தெரியவில்லை போலும்! இயேசு அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் தம்முடன் இருக்கும் சீஷர்களை நோக்கி.

15. : நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

அங்கு பல சீஷர்களுக்கு அவர் யாரென்பது சரியாக தெரியவில்லை எனவே ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பேதுரு மட்டும்

16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

அதைகேட்டு பரவசமடைந்த இயேசு "பிதாவாகிய தேவனே உனக்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று கூறி பாராட்டுகிறார்.

17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

ஆனால் அவர் மற்ற சீஷர்களை பார்த்து என்னை நீங்கள் என் சரியாக கணிக்கவில்லை என்று பெரிதாக எதுவும் கடிந்துகொண்டதாக தெரியவில்லை.

இவ்வாறு பரலோக பிதாவினடத்தில் இருந்து இயேசுவை பற்றிய சரியான வெளிப்பாட்டை பெற்ற பேதுருவே, இயேசு சிலுவைப்பாடுகள் குறித்து பேசும் போது "அது சம்பவிக்க கூடாது" என்று கூறும்போது இயேசு சற்றும் தயங்காமல் "அப்பாலேபோ சாத்தனே!" என்று கடிந்துகொண்டார். அவன் தனைப்பற்றி சரியான வெளிப்பாட்டை பெற்றவன் என்பதற்காக் எந்த தயவு தாட்சண்யமும் காட்ட வில்லை. அவனை சாத்தான் என்று வெளிப்படையாக சொல்லி கடிந்துகொண்டார். ஏனெனில் அவருக்கு எல்லாவற்றையும்விட பிதாவின் சித்தம் நிறைவேற்றுவது தான் முக்கியமாக இருந்தது
.

இதை நன்கு ஆராய்ந்தால், இங்கு யார் இயேசுவை சரியாக கணித்தார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, நம் எல்லோரையும் விட சாத்தானுக்கு இயேசு யார அவரின் நிலை என்னவென்பது மிக நன்றாகவே தெரியும் எனவே இவ்வுலகில் யார் சரியான வெளிப்பாட்டை பெற்றார்கள் என்பது கணக்கே அல்ல! யார் தேவனின் சித்தத்துக்கு தங்களை ஒப்புகொடுக்கிரார்கள் என்பது மட்டும்தான் நிலை நிற்கும்.

இயேசு "தேவனால் அனுப்பபட்டு நம்முடைய பாவத்துக்காக பலியான கிருபாதார பலி" என்பதை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசித்து பாவ மன்னிப்பை பெற்று தேவனுக்கு ஏற்ற பரிசுத்த ஜீவியம் செய்வதில்தான் முக்கியத்துவம் இருக்கிறதே தவிர, மற்ற காரியங்களை விவாதித்து சண்டை போட்டு சாபம்விடுவதில் அல்ல!

இயேசுவின் தாயார் ஒருமுறை அவரை பார்க்க வந்தபோது இயேசு மிக தெளிவாக சொன்ன இவார்த்தை:

லூக்கா 8:21 : தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

அதைவிட முக்கியமாக மலைப்பிரசங்கத்தில் சொல்லபட்ட சாதாரண பாக்கியவாங்களைவிட அதிக பாக்கியவான் ஒருவனையும் இயேசு குறிப்பிடுகிறார்.

யார் அந்த அதிக பாக்கியவான் தெரியுமா?

11:28 ர்: தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

கேட்கிறதற்கு காதும் புரிகிறதர்க்கு இருதயமும் இருப்பவன் கேட்டுக்கொள்ள கடவன்!

நாம் யாரை தொழுதுகோள்கிறோம்?

சங்கீதம் 29:2 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
ரோமர் 10:13 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

சங்கீதக்காரன், பவுல் மற்றும் இயேசுவின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு கர்த்தரை தொழுகோள்வோம்! சில சகோதரர்கள் சொல்வது போல அந்த கர்த்தர்தான் இயேசுவாக இருந்தால் அத்தொழுகை அவருக்கே போய் சேரட்டும்

அல்லது

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
பிலிப்பியர் 3:3 ஆவியினாலே தேவனுக்கு
ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்
வெளி 22:9 , இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் தேவ தூதர்களும் சொல்வதுபோல் தேவனை தொழுதுகொண்டு ஆராதனை செய்து, கிறிஸ்த்துவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம் ஒருவேளை சில சகோதரர்கள் சொல்வதுபோல் இயேசுவே தேவனாக இருந்தால் அதுவும் அவருக்கே போய் சேரும்.

அல்லது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற வர்களாக இருந்தாலும் சரி

இங்கு இயேசு எந்தஒரு வருத்தமும் படப்போவது இல்லை!

No comments: