Tuesday, April 15, 2008

அடுத்தவன் மனைவி ஓர் ஆபத்தான படுகுழி!

"மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்" என்பதுபோல், தனக்கு எவ்வளவு தான் அழகான அருமையான மனைவி கிடைத்திருந்தாலும் பிறன் மனைவியின் மீது ஒரு ஈர்ப்பு வருவது தவிக்க முடியாத ஒன்றாக அனேகருக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கொஞ்சம் அழகு குறைந்த மனைவி கிடைத்தவர்களை பற்றி சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
.
வேலை ஸ்தலத்தில், பஸ்ஸில் பயண நேரங்களில், கூட்ட நெரிசலில், சினிமா தேட்டரில், ஏன் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக கூட உள்ளே எட்டிப்பார்த்து ரசிக்கும் எவாளவோ பேரை நாம் இந்த உலகில் பார்க்க முடியும்
.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், இரவு அடுத்த வீட்டுக்கு போய் அந்த பெண்ணின் கணவர் அந்தப்பக்கம் படுத்து கிடக்கும் போதே இவர் இன்னொருபக்கம் படுத்து நோண்டிய சம்பவம்கூட உண்டு அது போன்று எத்தனையோ சம்பவங்களை பார்த்துள்ளேன்.
.
உயிர் நண்பன் என்று வீட்டுக்கு அழைத்து வந்தவனே தனது உயிர் மனைவியை தள்ளிக்கொண்டு ஓடிவிட்ட பல துரோக செயல்களை பார்த்திருக்கிறேன் அதுபோல் தான் உயிர் காதலனுக்காக(?) மனைவி/கணவன் பெற்ற பிள்ளைகள் இவர்களையே கொன்றவர்களையும் கூட நாம் செய்தி தாளில் படித்திருக்கிறோம்
.
வயித்தியம் பார்க்க வரும் பிறன் மனைவியை பார்த்து பயிதியமான டாக்டர் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். இன்னும் சாமியார்கள், தொழிலதிபர்கள், பணக்காரன் ஏழை என்று யாரையுமே இந்த ஈர்ப்பு விட்டு வைப்பது இல்லை
.

இப்படி பிறன் மனைவியை இச்சிப்பது என்பது மனிதனின் வாழ்க்கையை அடியோடு அழித்து விடக்கூடிய மகா பாவமாகும்
.

இந்து புராணங்களில் பிறன் மனைவியை இச்சித்து வேதனை அடைந்தவர்கள் அநேகர் இருந்தாலும், இராவணன் என்ற மாமனிதனே அதற்கு சரியான உதாரணம்! பிறன் மனைவியின் மீது கொண்ட மோகத்தால் தனது தவ வலிமை இழந்து நாட்டை இழந்து வீட்டை இழந்து அனைத்தையும் இழந்து அகால மரணம் அடைந்தான். மனம் திரும்ப பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டும் அவனால் திரும்ப முடியவில்லை
.

கிறிஸ்த்தவ வேதத்தில் இறைவன் 10கட்டளைகளில் ஒன்றாக "பிறன் மனைவியை இச்சியாது இருப்பாயாக" என்று கட்டளை இட்டுள்ளார். மற்றும் "பிறன் மனைவியை தொடுகிறவன் எவனும் ஆக்கினை தீர்ப்புக்கு தப்பான்" என்றும், ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்கிறான்" என்றும் விபச்சாரகாரன் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் இடத்தில் பங்கடைவான் என்றும் மிக கடுமையாக எச்சரிப்பு கூறப்பட்டுள்ளது.
.

எனவே இறைவனின் எச்சரிப்பை மனதில்கொண்டு பிறன் மனைவியை இச்சிப்பதை முற்றிலும் தவிர்ப்போமாக இல்லையெனில் ஆக்கினை தீர்ப்பாகிய நரக அக்கினிக்கு தப்பிப்பது மிகவும் கடினம்!
.

பிறன் மனைவி கொடுத்த மாந்த்ரீக வசிய மருந்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிம்பு வரை சென்று நரக பாதளத்தையும் பார்த்து தப்பித்து வந்ததால் இந்த எச்சரிப்பு செய்தியை அடியேன் எழுதுகிறேன்.

SUNDAR



No comments: